என் மலர்
நீங்கள் தேடியது "விசாரணை முகாம். Inquiry camp"
- பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை, மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு சார்பில் நிலம் பிரச்சனைகளை தீர்க்க விசாரணை முகாம் நடந்தது.
- முகாமில் 29 மனுக்கள் பெற்றப்பட்டு 21 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை, மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு சார்பில் நிலம் பிரச்சனைகளை தீர்க்க விசாரணை முகாம் நடந்தது.
முகாமிற்கு தாசில்தார் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். எஸ்ஐ அபுபக்கர் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு எஸ்ஐ குணாவதி, ஏட்டுக்கள் ராமராஜ், ரவிசாந்தகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர். முகாமில் 29 மனுக்கள் பெற்றப்பட்டு 21 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
மீதமுள்ள மனுக்கள் விசாரணையில் உள்ளது.






