என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமியின் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை"

    • 18 வயது நிறைவடையாமல் திருமணம் செய்யக்கூடாது.
    • கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த சோகனூர் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது பள்ளி மாணவிக்கு திருமணம் நடக்க இருப்பதாக ராணிபேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது.

    அவருடைய உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அரக் கோணம் உதவி கலெக்டர் பாத்திமா மற்றும் அரக்கோணம் தாசில்தார் பழனிரா ஜன் தலைமையிலான வரு வாய்த் துறை அலுவலர்கள் சோகனூர் பகுதியில் உள்ள - சிறுமியின் வீட்டில் இருந்த வர்களிடம் விசாரணை மேற் கொண்டனர்.

    அதில் சிறுமிக்கும் 31 வயதுள்ள கேரள மாநிலத்தை-சேர்ந்த நபருக்கும் இன்று மகேந்திரவாடி கோவிலில் திருமணம் நடைபெற இருந்ததும், அதற்காக இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளதும் தெரிய வந்தது.

    இதனைய டுத்து மாணவிக்கு 18 வயது நிறைவடையாமல் திருமணம் செய்யக்கூடாது, அப்படி செய்வது சட்டப்படி குற்றமாகும். சிறுமி தொடர்ந்து படிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும், மீறி சிறுமிக்கு திருமணம் செய்ய முற் பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். இதனால் மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

    ×