என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகாசி விசாக வீதி உலா"

    • கடலூர் வண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் வைகாசி விசாக வீதி உலா நடந்தது.
    • கடலூர் வண்டிப்பாளை யத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சிவசுப்ரமணிய கோவில் உள்ளது.

    கடலூர்:

    கடலூர் வண்டிப்பாளை யத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சிவசுப்ரமணிய கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடந்தோறும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு வசந்த விழா உற்சவம் பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதனை யொட்டிகடந்த 3- ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்று வந்தது. இன்று வசந்த உற்சவ சிகர நிகழ்ச்சியான வைகாசி விசாகத்தை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்கா–ரத்தில் வள்ளி தேவசேனா சிவசுப்பிரமணிய சாமி வீதி உலா முக்கிய மாட வீதியில் சென்று வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தி–யுடன் சாமி கும்பிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவ–லர்கள் மற்றும் செங்குந்தர் மரபினர்கள் செய்து வந்தனர்.

    ×