என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் கடும் அவதி."

    • 3 பேர் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள்.
    • கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரிகள் புகார்.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது.இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தலைவர் ஞானவேலு இளைஞரணி செயலாளர் அருண்பிரசாத் மற்றும் வியாபாரிகள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    காட்பாடி ரெயில்வே மேம்பாலம் 25 அடி அகலமும் 300 அடி நீளமும் கொண்டது. வேலூர் மாவட்டத்தையும் ஆந்திர மாநிலத்தையும் இணைத்து வருவாயை ஈட்டித்தரும் பாலமாக விளங்கி வருகிறது. இந்த பாலத்தை பழுதுபார்க்கும் பணியில் 3 பேர் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். இப்படி இருந்தால் பணி எப்போது முடியும். மாற்றுப்பாதைக்கு நிதி ஒதுக்கப்பட்டு இன்னும் சரி செய்யப்படவில்லை. பாலத்தின் 3 பகுதிகளில் உறுதியாக போடப்படும் இரும்பு சட்டங்கள் உறுதி மற்றும் பாதுகாப்பு குறைவானவை.

    5 டன் முதல் 80 டன் வரை கனரக வாகனங்கள் மற்றும் பஸ்கள் இந்த பாலத்தில் செல்ல வேண்டி உள்ளது. எனவே 5 இடங்களில் கனமான தண்டவாளங்களை பயன்படுத்தி கட்டமைப்பை மேற்கொள்ளவேண்டும். ரெயில்வே மேம்பாலம் மராமத்து பணி தொய்வாக நடப்பதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் விவசாயிகள் வணிகர்கள் காட்பாடி வழியாக திருப்பதி செல்லும் பக்தர்கள் 108 ஆம்புலன்சு எற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பணிகளை தரமாக விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    வேலூர் அடுத்த பெருமுகை ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆனந்த பிரியா என்பவர் இன்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் பெருமுகை மலை அடிவாரத்தில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் வசதி இல்லை.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் தொட்டி போர்வெல் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைத்து வசதியை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    ×