என் மலர்
நீங்கள் தேடியது "மருத்துவ கருத்தரங்கு"
- விழாவில் கருத்தரங்கு மலர் வெளியிடப்பட்டது
- மருத்துவ நிபுணர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர்:
வேலூர் நறுவீ மருத்துவமனை வலி மருத்துவத்துறைசார்பில் தசைக்கூட்டு வலிக்கான மருத்துவம் குறித்து ஒருநாள் கருத்தரங்கு நேற்று நடந்தது.
நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். மருத்துவமனை மயக்க மருந்தியல் துறைத் தலைவர் மற்றும் கருத்தரங்கு அமைப்பாளர் டாக்டர் சரவணன் வரவேற்றார். கருத்தரங் கின் நோக்கம் குறித்து நறுவீ மருத்துவமனை செயல் இயக் குனர் டாக்டர் பால்ஹென்றி விளக்கி கூறினார்.
சிறப்பு விருந்தினராக புதுச்சேரி அரசு இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய வலி மருத் துவ நிபுணர் டாக்டர் மதன் பாண்டியன் கலந்து கொண்டு கருத்தரங்கு மலரை வெளியிட்டு பேசினார்.
கருத்தரங்கில் முழங்கை, மணிக்கட்டு உடற்கூறியல், தோள்பட்டை, முழங்கை மற் றும் தோள்பட்டை அல்ட் ராசவுண்டு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வலி நிவாரண மருத்துவம் குறித்து மருத்துவ நிபுணர்கள் பேசினார்கள்.
இதில் நறுவீ மருத்துவ மனை தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், பொதுமேலாளர் நிதின் சம்பத், வலி மருத்துவத்துறை தலைவர் மற்றும் கருத்தரங்கு அமைப்பாளர் டாக்டர்ஜெய சுதா, மருத்துவமனை டாக் டர்கள், செவிலியர்கள் மற் றும் தேசிய அளவில் பல்வேறு மருத்துவமனைகளை சேர்ந்த மயக்க மருந்தியல் நிபுணர்கள், மூட்டுவலி மருத்துவ நிபுணர்கள், வலி நிவாரண நிபு ணர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






