என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருட்டை தடுக்க நடவடிக்கை"

    • கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டும் பைக் திருட்டு சம்பவங்கள் குறையவில்லை.
    • தனியாக குற்றப் பிரிவு போலீசாரை நியமிக்க வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய எல்லைகளாக ஒருபக்கம் காட்பாடி ரோட்டில் சென்றாம்பள்ளி கிராமம், வேலூர் ரோட்டில் ஹைதர்புரம் வரையிலும், பலமநேர்ரோட்டில் லட்சுமணாபுரம் வரையிலும், சித்தூர் ரோட்டில் முனாப்டிப்போ வரையிலும், பேர்ணாம்பட்டு ரோட்டில் லிங்குன்றம் வரையிலும், மேல்பட்டி ரோட்டில் போஜனாபுரம் வரையிலும் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய எல்லைகளாக உள்ளன.

    சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டது குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையம், குடியாத்தம் நகராட்சி மற்றும் ஏராளமான கிராமங்கள் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குள் உள்ளது.

    குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குள் ஏராளமான தீப்பெட்டி தொழிற்சாலைகள், பீடி தொழிற்சாலைகள், கைத்தறி நெசவு கூடங்கள், காலனி தொழிற்சாலைகள், தோல் தொழிற்சாலை, பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் என ஏராளமாக உள்ளது மேலும் குடியாத்தம் நகரின் மையப் பகுதியில் மிகப்பெரிய தினசரி மார்க்கெட் உள்ளது உழவர் சந்தையும் உள்ளது வேலூர் மாவட்டத்திலேயே அதிக அளவு நகை கடைகளையும் குடியாத்தம் நகரில் உள்ளடக்கியுள்ளது.

    குடியாத்தம் டவுன் தாண்டி தமிழகத்தின் பிற பகுதியிலிருந்தும் வட மாநிலங்களில் இருந்தும் வாகனங்கள் சென்று வருகின்றன. எப்போதும் நெரிசல் மிகுந்த முக்கியமான ஒரு வியாபாரத் தளமாகவும் குடியாத்தம் நகரம் அமைந்துள்ளது.

    குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தாலும் புகாரை பெறுவதிலும் காவலர்கள் இல்லை பெற்றுக் கொண்டாலும் சரியான பதில் இல்லை உடனடி நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் உள்ளது.

    அதேபோல் மோட்டார் சைக்கிள்கள் திருடப்படாத நாளே இல்லை எனக் கூறும் அளவிற்கு குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டு நடைபெற்ற வண்ணம் உள்ளது. குறிப்பாக அரசு மருத்துவமனை சாலையில் மருத்துவமனைக்கு நோயாளிகளுடன் வரும் அவரது உறவினர்கள் நோயாளிகள் உடைய மோட்டார் சைக்கிள் திருடு போகிறது, அதேபோல் பஸ் நிலையம், உழவர் சந்தை பஜார், சந்தப்பேட்டை, நேதாஜிசவுக் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் திருடுபோன வண்ணம் உள்ளது.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்தும் அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை பெரும்பாலான வாகனங்கள் இன்சூரன்ஸ் காலாவதியாகி உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது சிக்கலாக உள்ளது. இருப்பினும் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக குடியாத்தம் டவுன் பகுதியில் திருடப்படும் மோட்டார் சைக்கிள்கள் குடியாத்தம் கிராமிய பகுதிகள் மற்றும் பேர்ணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட சமூகவிரோத செயல்கள் செயல்படுபவர்கள் மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அந்த மோட்டார் சைக்கிள்களை பெரும்பாலும் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது மேலும் இந்த மோட்டார் சைக்கிள்கள் கர்நாடக மற்றும் ஆந்திர மாநில எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. குடியாத்தம் டவுன் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் குறையவில்லை.

    திருட்டு சம்பவங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் வேலூர் சரக டிஐஜி ஆனிவிஜயா, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் குடியாத்தம் பகுதிக்கு தனி கவனம் செலுத்தி வேலூரில் உள்ளதுபோல் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய த்திற்கு தனியாக குற்றப்பிரிவு அமைக்க வேண்டும் அதற்காக இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இருப்பினும் இது நாள் வரை மோட்டார் சைக்கிள்களில் பறிகொடுத்த பொதுமக்களின் புகார்கள் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அவர்களுடைய மோட்டார் சைக்கிள்களை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

    ×