என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டு வசதி வாரியம் சார்பில் வீடு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஆணை - அமைச்சர் வழங்கினார்"

    • குடிசைமாற்று வாரிய வீட்டுவசதிவாரியம் சார்பில் ரூ. 49 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 576 அடுக்குமாடிகுடியிருப்பு வீடுகளை தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஆணை வழங்கப்பட்டது.
    • இந்த வீடுகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற நகர்ப்புற ஏழைகளின் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பும் சுமார் 400 சதுர அடி பரப்பளவு கொண்டது.

    அரியலூர்:

    அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கீழப்பழுவூர் குடிசைமாற்று வாரிய வீட்டுவசதிவாரியம் சார்பில் 49 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 576 அடுக்குமாடிகுடியிருப்பு வீடுகளைதேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு

    போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், எம்பி திருமாவளவன், மாவட்ட கலெக்டர்ரமண சரஸ்வதி, எம்எல்ஏக்கள் கு.சின்னப்பா, கண்ணன், ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினர்.

    இத்திட்டத்தின்கீழ் கீழப்பழுவூர் திட்டப்பகுதியில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 576 அடுக்குமாடி குடியிருப்புகள் அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    இந்த வீடுகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற நகர்ப்புற ஏழைகளின் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பும் சுமார் 400 சதுர அடி பரப்பளவு கொண்டது.

    குடியிருப்புகளில் ஒவ்வொரு குடியிருப்பும் வசிப்பறை, சமையலறை, படுக்கையறை, குளியலறை மற்றும் கழிப்பறை போன்ற பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    அனைத்து குடியிருப்புகளுக்கும் போதுமான காற்றோட்ட வசதி, குடிநீர் வசதி, ஆழ்துளாய் கிணறுகள், 3 கீழ்நிலை தண்ணீர் தொட்டிகளுடன், கழிவுநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. இத்திட்ட பகுதியில் மழைநீர் வடிகால், மழைநீர் சேகரிப்பு, கட்டிடங்களை சுற்றி பேவர் பிளாக், நடைபாதை ஆகிய அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    இக்குடியிருப்புகளுக்கான பயனாளிகள்வீடற்ற, அரியலூர் நகராட்சி பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்த மனுவின் அடிப்படையில் தளஆய்வு செய்து, 576 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில் அரியலூர் நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன், திருமானூர் யூனியன் சேர்மன் சுமதி, வாலாஜா நகரம் ஊராட்சி மன்ற தலைவர் அபிநயா இளையரசன், வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் இளம்பரிதி, முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×