என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம்"

    • கலெக்டர் பங்கேற்பு
    • 33 கால யாக பூஜை நடைபெற்றது.

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த அகரம் கிராமத்தில் உள்ள சித்த புத்த சமேத மண்டபத்து விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவையொட்டி கணபதி ஹோமம், மகாலட்சுமி, நவகிரக ஹோமம், கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை மற்றும் 33 கால யாக பூஜை நடைபெற்றறது.

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் கோவில் கோபுரத்தில் உள்ள விமானத்தின் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் கலெக்டரின் தாய், தந்தை மற்றும் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் லட்சுமணன் , கலவை தாசில்தார் ஷமீம் , கலவை மருத்துவ அதிகாரி டாக்டர் சங்கீதா மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் .

    ×