என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்ம நபர்களால் அடித்து கொலை"

    • வக்கீலை சந்திக்க வரும்போது மடக்கி பிடித்தனர்.
    • மற்றொரு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டை ஊராட்சி லிங்குன்றம் வெள்ளகுட்டை பகுதியைச் சேர்ந்த நிலத் தரகர் பழனி (வயது 45) என்பவர் கடந்த சனிக்கிழமை இரவு தனது பைக்கில் சென்றார்.

    நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் வைத்து மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி கே வி குப்பம் அடுத்த மாச்சனூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (38) என்பவரை கைது செய்தனர். இவரது சித்தப்பாமகளுடன் பழனிக்கு பழக்கம் ஏற்பட்டது.

    ஆத்திரத்தில் இருந்த கோவிந்தராஜ் பழனியை தீவிரமாக கண்காணித்து வந்துள்ளார்.கடந்த சனிக்கிழமை இவரது சித்தப்பா மகளும்பழனியும் சினிமாவுக்கு போய் விட்டு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    குடியாத்தம் பஸ் நிலையத்தில் பெண்ணை இறக்கி விட்டுள்ளார். அப்போது கோவிந்தராஜ் தூரத்திலிருந்து தனது நண்பரான தேவரிஷி குப்பத்தை சேர்ந்த கார்த்தி என்கிற தயாநிதி என்பவருடன் பழனியை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

    நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதிக்கு செல்லும்போது கோவிந்தராஜு ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை, பழனியின் மோட்டார் சைக்கிள் மீது மோதி உள்ளனர்.

    கீழே விழுந்த பழனியை இரும்பு பைப்பால் கோவிந்தராஜும், தயாநிதியும் சரமாரியாக தாக்கியுள்ளனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த பழனி அங்கேயே இறந்துவிட்டார்.

    தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து ஆய்வு செய்தபோது பழனியின் மோட்டார்சைக்கிளை கோவிந்தராஜ் மற்றும் அவரது நண்பர் பின்தொடர்ந்து செல்வது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அவரது செல்போன் சிக்னலை கண்காணிக்கும் போது அந்த செல்போன் சிக்னல் ஆந்திர மாநிலம் பலமநேரை காட்டியது.

    இதனையடுத்து தனிப்படையினர் அங்கு சென்று தேடினர். தேடுவதை அறிந்த கோவிந்தராஜ் வழக்கு சம்மந்தமாக வக்கீலை சந்திக்க வரும்போது நேற்று காலையில் காந்திநகரில் வைத்து போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

    மேலும் இவ்வழக்கில் மற்றொரு குற்றவாளியான தயாநிதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×