என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்ம ஆசாமிகள் திருட்டு"

    • 5 பவுன் நகை, பணம் திருட்டு.
    • சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் விக்னேஷ் (வயது 28) இவர் கடந்த 6-ந்தேதி இரவு தனது வீட்டின் மூன் கதவை தாழ்ப்பாள் போடாமல் டிவி பார்த்துக்கொண்டே தூங்கி விட்டார்.

    மறுநாள் காலை எழுந்து பார்க்கும் போது ட்ரெஸ்ஸிங் டேபிள் வைத்திருந்த 5 சவரன் தங்க நகை மற்றும் ரொக்கப் பணம் யாரோ திருடி சென்று உள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் விக்னேஷ் நேற்று ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காதர் கான் வழக்குப்பதிவு செய்து 5 சவரன் தங்க நகை மற்றும் ரொக்கப் பணம் திருடிய மர்ம ஆசாமிகள் குறித்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேலும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×