என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதரவற்ற பெண்ணின் உடல்"

    ஒடிசா மாநிலத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை வண்டியில் ஆதரவற்ற பெண்ணின் உடல் கொண்டு செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் பலேஷ்வர் மாவட்டத்தில் உள்ள துடிகாதியா பகுதியில் ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் மயமக்கமடைந்து சாலையோரம் கிடந்தார். அவரை பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் உடலை வாங்க யாரும் முன்வரவில்லை.

    இதுகுறித்து சோரோ பகுதி மாநராட்சிக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் மூதாட்டியின் உடலுக்கு மாநாகராட்சியே இறுதி சடங்கு செய்தனர். மருத்துவமனையில் இருந்து உடலானது குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது. இதுகுறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனை கண்ட பலர் மாநகராட்சியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    ×