என் மலர்
நீங்கள் தேடியது "வங்கி வாடிக்கையாளர்கள்"
- உண்மை தன்மை தெரியாத பலர் அந்த எண்ணிற்கு தொடர்பு கொள்கின்றனர்.
- மோசடி கும்பல் இவற்றை பயன்படுத்தி லிங்க் வாயிலாக பண மோசடியில் ஈடுபடுகின்றனர்.
சென்னை:
வங்கி கிளை தொடர்பு எண்கள், ஆன்லைன் பேங்கிங், கார்டு புகார்கள் குறித்த விவரங்களை அறிய வாடிக்கையாளர் சேவை மைய எண்கள் வங்கி வாயிலாக வழங்கப்பட்டு உள்ளன.
வங்கிகளுக்கு நேரில் செல்ல முடியாத பட்சத்தில் பலர் இணையதளத்தில் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் பெயரை பதிவிட்டு வாடிக்கையாளர் சேவை மைய எண்களை பெறுவர். அதில் சில செல்போன் எண்கள் வரும். இவ்வாறு தேடப்படும் எண்கள் சமீப நாட்களாக மோசடி கும்பலால் மாற்றப்படுகிறது. உண்மை தன்மை தெரியாத பலர் அந்த எண்ணிற்கு தொடர்பு கொள்கின்றனர். மோசடி கும்பல் இவற்றை பயன்படுத்தி லிங்க் வாயிலாக பண மோசடியில் ஈடுபடுகின்றனர்.
ஆன்லைனில் வங்கி வாடிக்கையாளர் சேவை எண்ணை தேட வேண்டாம். எனவே வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று தகவல்களை தெரிந்து கொள்வது சரியானதாக இருக்கும் என்று வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் அரசு வங்கியில் உள்ள தங்களது கணக்குகளில் கோடிக்கணக்கான ரூபாய் விழுந்த மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் திக்குமுக்காடினர். #Bankerror #Malappurammillionaires
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்கல் ஆரியவைத்திய சாலை என்ற மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் மாதந்தோறும் தங்களது சம்பளத்தை ஸ்டேட் பேங்க் வங்கி கணக்கின் மூலம் பெற்று வந்தனர்.
இந்நிலையில், அவர்களில் 22 பணியாளர்களின் இந்த மாத சம்பளத்தில் ஒவ்வொருவருக்கும் 90 லட்சம் முதல் 19 கோடி ரூபாய் வரை வரவு வைக்கப்பட்டதை அறிந்து அவர்கள் மகிழ்ச்சி பெருக்கில் திக்குமுக்காடிப் போயினர்.
ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. கம்ப்யூட்டர் குளறுபடியால் ஏற்பட்ட இந்த தவறை உணர்ந்துகொண்ட வங்கி நிர்வாகம், தவறுதலாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட இந்த நபர்களின் வங்கி கணக்குகளை உடனடியாக முடக்கி விட்டதால் ஓரிரவு மட்டுமே நீடித்த அவர்களின் கோடீஸ்வர கனவு, மறுநாள் காலை புஸ்வாணமாகிப் போனது. #Bankerror #Malappurammillionaires






