என் மலர்
நீங்கள் தேடியது "திட்டச்சேரி விபத்து"
திருமருகல்:
நாகை மாவட்டம், திட்டச்சேரி அருகே உள்ள மத்தியகுடியைச் சேர்ந்த தம்புதாஸ் மகன் பிரபாகரன் (வயது 27). இருவரும் நண்பர்கள் ஜீவன் ராஜகுரு (27). காமராஜ் ஆகிய 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திட்டச்சேரியிலிருந்து திருப்பட்டினம் நோக்கி சென்றனர்.
அவர்கள் திட்டச்சேரியை அடுத்த ஆலங்குடிச்சேரி என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த காமராஜ், ஜீவன் ராஜகுரு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மோட்டர் சைக்கிளை ஓட்டி வந்த பிரபாகரன் அதிர்ஷ்ட வசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் திட்டச்சேரி இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 2 பேர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த காரைக்கால் அருகே கோவில்பத்தை சேர்ந்த விக்னேஷ் (24) என்பவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் திருக்கண்ணபுரம் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் தனது தாயை பள்ளி முடிந்து வீட்டுக்கு அழைத்து சென்ற போது இந்த விபத்து நடந்ததாக தெரிவித்தார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் திட்டச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






