என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிராந்தி நிறுவனம்"

    ஈரோடு அருகே டாஸ்மாக் கடையில் வாலிபர் வாங்கிய மது பாட்டிலில் உடைந்த கண்ணாடி துண்டு இருந்தது குறித்து பிராந்தி நிறுவனம் மீது கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
    சென்னிமலை:

    சென்னிமலை மேற்கு ராஜ வீதியை சார்ந்தவர் தமிழ்செல்வன். இவர் சென்னிமலை அடுத்த தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள அம்மாபாளையம் டாஸ்மாக் கடைக்கு இரவு சென்றார்.

    100 ரூபாய் மதிப்புள்ள ஒரு குவார்ட்டர் வாங்கி அங்குள்ள பாரில் குடித்தார். பாதி குடித்த நிலையில் அந்த பாட்டிலுக்குள் பெரிய கண்ணாடி துண்டு கிடப்பதை அவர் பார்த்தார்.

    இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். பாட்டிலின் வாய்பகுதியை விட கண்ணாடி துண்டு பெரியதாக இருந்ததால் பாட்டிலுக்குள் இருந்த கண்ணாடி துண்டு வெளியே வரவில்லை.

    சிறிய கண்ணாடி துண்டாக இருந்திருந்தால் அது பாட்டிலுக்குள் இருந்து வெளியே வந்து தமிழ்செல்வனின் வயிற்றுக்குள் சென்று குடலை கிழித்திருக்கும்.

    பாட்டில் தயாரிக்கும் போதே உள்ளே அந்த கண்ணாடி துண்டு பாட்டிலுக்குள் இருந்திருக்கலாம் என தெரிகிறது.

    ஒருவேளை கண்ணாடி துகள்கள் பாட்டிலுக்குள் இருந்திருக்குமோ? என்றும் அந்த துகள்கள் தனது வயிற்றுக்குள் சென்றிருக்குமோ? என்ற அச்சத்தில் தமிழ்செல்வன் வாந்தி எடுத்தார்.

    இதனையடுத்து அவரது நண்பர்கள் அவரை முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பாரில் மது அருந்த வந்தவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி தமிழ்செல்வன் கூறும்போது, ‘‘இந்த விவகாரத்தில் சரியான அக்கறை இல்லாமல் பொறுப்பற்ற நிலையில் பிராந்தி தயாரிப்பு நிறுவனம் இருந்திருக்கிறது.எனவே இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன்’’ என்றார். #tamilnews
    ×