என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை விபத்தில் இந்தியர் பலி"

    நியூசிலாந்தின் டவுரங்கா நகரில் லாரியும் காரும் மோதிய விபத்தில் இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. #Accident
    மெல்போர்ன்:

    நியூசிலாந்து நாட்டின் ஒஹால்டி பகுதியில் வசித்து வந்தவர் பர்மிந்தர் ஜபால் (27). இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவர் நேற்று காலை தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

    டவுரங்கா நகரில் நெடுஞ்சாலை எண் 36ல் கார் சென்றபோது லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பர்மிந்தர் ஜபால் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து விபத்து பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்றனர். காயமடைந்த லாரி டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×