என் மலர்
நீங்கள் தேடியது "காஞ்சீபுரம் பள்ளி மாணவன்"
காஞ்சீபுரத்தில் பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அடுத்த சித்தேரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். அதேபகுதியில் டயர் பஞ்சர் கடை வைத்துள்ளார். இவரது மகன் ரகு (15). பெரிய காஞ்சீபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தாமல் பாடங்களை ஒழுங்காக செய்யாமல் இருப்பதாக கூறப்படும் நிலையில் நேற்று மாலை வகுப்பு ஆசிரியர் ரகுவை வகுப்பிற்கு வெளியே நிற்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாடியில் இருந்து மாணவன் கீழே குதித்துள்ளான். அவரது அலறல் சத்தம் கேட்டு பள்ளி நிர்வாகத்தினர் காயமடைந்த ரகுவை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது மாணவன் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் பழனி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
காஞ்சீபுரம் அடுத்த சித்தேரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். அதேபகுதியில் டயர் பஞ்சர் கடை வைத்துள்ளார். இவரது மகன் ரகு (15). பெரிய காஞ்சீபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தாமல் பாடங்களை ஒழுங்காக செய்யாமல் இருப்பதாக கூறப்படும் நிலையில் நேற்று மாலை வகுப்பு ஆசிரியர் ரகுவை வகுப்பிற்கு வெளியே நிற்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாடியில் இருந்து மாணவன் கீழே குதித்துள்ளான். அவரது அலறல் சத்தம் கேட்டு பள்ளி நிர்வாகத்தினர் காயமடைந்த ரகுவை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது மாணவன் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் பழனி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews






