என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விருத்தாசலம் தொழிலாளி கொலை"

    விருத்தாசலத்தில் முன்விரோதம் காரணமாக கட்டிட தொழிலாளி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பூதாமூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 34). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி.

    இவருக்கும், பாண்டியனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் பாண்டியனும், தெய்வசிகாமணியும் சந்தித்து பேசி கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த தெய்வசிகாமணியின் தாய் தனலட்சுமி, பாட்டி அசோகை ஆகியோர் பாண்டியனிடம், ஏன் தெய்வசிகாமணியுடன் பேசி கொண்டிருக்கிறாய்? உங்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருக்கிறதே பிறகு ஏன் பேசி கொண்டிருக்கிறாய்? என்று கூறி விட்டு சென்றனர்.

    இதனால் பாண்டியன் ஆத்திரம் அடைந்தார். இரவு 9 மணி அளவில் பாண்டியன், அவரது தம்பி சுரேஷ் (32), அதே பகுதியை சேர்ந்த பிரபுராஜ் (33) ஆகியோர் தெய்வசிகாமணி வீட்டுக்கு சென்றனர்.

    அங்கிருந்த தெய்வசிகா மணி, அவரது தாய் தனலட்சுமி மற்றும் பாட்டி அசோகை ஆகியோரை தாக்கினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சபரிநாதன் (29) என்பவர் அங்கு வந்தார். அவர் பாண்டியனிடம், ஏன் சண்டை போட்டு கொண்டிருக்கிறீர்கள் என்று தட்டிக்கேட்டார்.

    ஏற்கனவே பாண்டியனுக்கும், சபரிநாதனுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பாண்டியன் கத்தியால் சபரிநாதன் கழுத்தில் குத்தினார். இதில் அதே இடத்தில் சபரிநாதன் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

    இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்று சபரிநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இதற்கிடையே சபரிநாதன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது மனைவி மஞ்சுளா (25) மற்றும் உறவினர்கள் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    அங்கு அவர்கள் கதறி அழுது புரண்டனர். தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று உறுதி அளித்தனர்.

    இந்த கொலை தொடர்பாக இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் தலைமறைவாகி விட்ட பாண்டியன், சுரேஷ், பிரபுராஜ் ஆகியோரை தேடிவந்தனர்.

    இன்று காலை அவர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
    ×