என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடைநிலை ஆசிரியர்கள் கைது"

    • மெரினா காமராஜர் சாலையில் பேரணியாக சென்றபோது தடுத்ததால் தள்ளுமுள்ளு.
    • காவல்துறையினர் உடனான தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் இடைநிலை ஆசிரியர் ஒருவர் மயக்கமடைந்தார்.

    சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் நான்காவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மெரினா காமராஜர் சாலையில் பேரணியாக சென்றபோது தடுத்ததால் இடைநிலை ஆசிரியர்கள்- காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    பேரணியை தடுத்ததால் இடைநிலை ஆசிரியர்கள் மெரினா காமராஜர் சாலையில் அமர்ந்து போராடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில், காமராஜர் சாலையில் பேரணி சென்ற இடத்தில் ஆசிரியர்களை தடுத்து நிறுத்திய போலீசார் குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.

    பேரணியாக சென்றபோது காவல்துறையினர் உடனான தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் இடைநிலை ஆசிரியர் ஒருவர் மயக்கமடைந்தார்.

    கடந்த 2009ம் ஆண்டில் மறைந்த கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சுமார் 20,000 இடைநிலை ஆசிரியர்கள் குறைந்த சம்பளத்தில் நியமனம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். #Intermediateteachers
    சென்னை:

    சம்பள முரண்பாடுகளை களையக் கோரி தமிழக அரசுடன், இடைநிலை ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து,  இன்றிரவு முதல் டிபிஐ வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.  

    போராட்ட அறிவிப்பை தொடர்ந்து டிபிஐ வளாகத்தின் அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டது. 700-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். 

    இந்நிலையில், சம்பள முரண்பாடுகளை களையக்கோரி, சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ராபர்ட் உட்பட 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். #Intermediateteachers 
    ×