என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உழவர் உழைப்பாளர் கழகம்"

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் 7 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. 7 தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
    அந்தியூர்

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் 7 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. 7 தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    அதன் நிறுவனத் தலைவர் ஜே.ஜோதிக்குமார் கரூரில் போட்டியிடுகிறார். வேலூரில் ஹபிபுல்லா, திருப்பூரில் ஏ.நல்லசாமி, கிருஷ்ணகிரியில் எல்லப்பன், திருச்சியில் நாச்சி சேகர், மத்திய சென்னையில் ‌ஷர்மிளா, விழுப்புரத்தில் பிரபாகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இந்த தகவலை அந்தியூரில் அதன் நிறுவனர் ஜோதி குமார் நிருபர்களிடம் தெரிவித்தார். வேட்பாளர்களின் பட்டியலையும் வெளியிட்டார்.
    ×