என் மலர்
நீங்கள் தேடியது "வலிமையான பிரதமர்"
ஒரு அரசாங்கத்தின் பிடி மேலிடத்தில் உள்ள பலரது கைகளில் சிக்காமல் மக்களை மட்டுமே எஜமானர்களாக கொண்ட வலிமையான பிரதமர் நாட்டுக்கு தேவை என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #strongPM #highcommand #Modi
பெங்களூரு:
பாராளுமன்ற தேர்தலையொட்டி கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா பகுதியில் நடைபெற்ற பாஜக பிரசார கூட்டத்தில் இன்று பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.
பாகிஸ்தானுக்குள் புகுந்து நமது நாட்டின் விமானப்படைகள் தாக்குதல் நடத்தியபோது உலக நாடுகள் நமக்கு துணையாக நின்றன. ஆனால், ’மெகா கூட்டணி’ என்று தங்களை அழைத்துக்கொள்ளும் எதிர்க்கட்சிகள் மட்டும் என்னை தாக்கிப் பேசின என மோடி வருத்தம் தெரிவித்தார்.

இதைப்போன்ற பெரிய கூட்டணிகளை கொண்ட அரசு இந்த நாட்டுக்கு தேவையில்லை. அப்படி ஒரு ஆட்சி அமைந்தால் அரசின் அதிகாரம் மேலிடத்தில் உள்ள பலரின் கைகளின் சிக்கிக் கொள்ளும். பலரின் கைகளில் சிக்கி ‘ரிமோட் கன்ட்ரோல்’ மூலம் நடக்கும் அரசாங்கம் வேண்டுமா?
அல்லது, மக்களை மட்டுமே எஜமானர்களாக கொண்டு பலமான பிரதமரின் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டுமா? என இந்த தேர்தலில் வாக்காளர்களாகிய நீங்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் மோடி குறிப்பிட்டார். #strongPM #highcommand #Modi






