என் மலர்
நீங்கள் தேடியது "Sivakasi Student"
- சிவகாசி கல்லூரி மாணவருக்கு சிறந்த சமூக சேவகருக்கான விருது வழங்கப்பட்டது.
- “அறம் விருதுகள் 2022” என்ற தலைப்பில் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
சிவகாசி
"அறம் செய்ய விரும்பு" அறக்கட்டளை ஆக்ஸ்பா யுனிவர்சிட்டி மற்றும் நீதியின் குரல் இணைந்து "அறம் விருதுகள் 2022" என்ற தலைப்பில் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிவகாசி பி.எஸ்.ஆர். ெபாறியியல் கல்லூரி 3-ம் ஆண்டு எந்திரவியல் துறை மாணவர் மாரிமுத்து, சிறந்த சமூக சேவகருக்கான விருதை பெற்றார்.
விருது பெற்ற மாணவருக்கு கல்லூரி தாளாளர் சோலைசாமி, இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார், முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி, எந்திரவியல் துறைத்தலைவர் கனகசபாபதி, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் துர்க்கை ஈஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.






