என் மலர்
நீங்கள் தேடியது "Sirasu Festival Chariot"
- ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்
- 6 மணிக்குள் நிலைக்கு வர வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கங்கை அம்மன் கோவில் சிரசு திருவிழாவை முன்னிட்டு வரும் 14-ந்தேதி தேர் திருவிழாவும், 15-ந் தேதி அம்மன் சிரசு ஊர்வலம், 17-ந் தேதி பூப்பல்லக்கு நடைபெற உள்ளது. ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
கெங்கையம்மன் கோவில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் கெங்கையம்மன் கோவில் ஊர் நாட்டாமை ஆர்.ஜி.சம்பத், திருப்பணி கமிட்டி தலைவர் ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலர் கலந்து கொண்டனர்.முடிவில் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் கலைவாணி நன்றி கூறினார்.
கூட்டத்தில் கோவிலை சுற்றி தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், தேர் சல்லும் பாதைகளை உள்ள மரக்கிளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும், திருவிழாவை முன்னிட்டு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும், தேர் சொல்லும் பாதையிலும், அம்மன் சிரசு சேரும் பாதையிலும் தீயணைப்பு துறையினர் பணியில் இருக்க வேண்டும், மருத்துவத்துறை சார்பில் தேவையான மருந்துகள் டாக்டர்கள் செவிலியர்களுடன் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும், கேமராக்களை அமைத்து கண்காணிக்க வேண்டும், சிரசு திருவிழாவுக்கு முன்பாக மக்கள் நெரிசலை தவிர்க்க ஒற்றை வழி பாதை அமைத்த போக்குவரத்து எளிதாக்க வேண்டும், பக்தர்கள் வசதிக்காகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்க வேண்டும் தொடர்ந்து தேரோட்டம் மாலை 6 மணிக்குள் நிலைக்கு வர வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
அப்போது விழா குழுவினர் பக்தர்கள் வசதிக்கா வெளியூரிலிருந்து பக்தர் வருவதாகவும் இரவு 8 மணி வரை தேரோட்டம் நடைபெற அனுமதிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.
பக்தர்கள் நெரிசல் இன்றி உள்ளே செல்லவும் வெளியே வரவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.






