என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Simmakulam opening"

    • பாலாற்றிலும் நீராட வசதி
    • 400 போலீசார் பாதுகாப்பு

    வேலூர்:

    வேலூா் மாவட்டம், விரிஞ்சிபுரம் மாா்க்கபந்தீஸ்வரா் கோவிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதத்தில் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமை கடை ஞாயிறு விழாவாக கொண்டாடப்படுகிறது.

    இதற்கு முந்தைய தினமான சனிக்கிழமை இரவு குழந்தை பாக்கியம் வேண்டும் பெண்கள், திருமணம் நடைபெற வேண்டும் பெண்கள் கோவிலில் உள்ள சிம்மக்குளத்தில் நீராடிவிட்டு, ஈரத்துணியுடன் கோவில் வளாகத்தில் படுத்து உறங்குவா். அவா்களது கனவில் சாமி அருள்பாலிப்பாா் என்பது ஐதீகம். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொள்வார்கள்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த இந்த திருவிழா இந்த ஆண்டு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

    நாளை சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் சிம்மக்குளம் திறக்கப்படுகிறது.

    கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக சிம்மக்குளத்தில் நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த ஆண்டு சிம்மக்குளம் நீராட அனுமதிப்பதால் குளத்தை முழுமையாக தூய்மைப்படுத்தி தண்ணீா் நிரப்பபட்டுள்ளது.

    பாலாற்றில் இந்த ஆண்டு தண்ணீர் செல்வதால் அங்கும் பெண்கள் நீராட வசதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பெண்கள் சிம்மக் குளத்தில் நீராடியபிறகு கோவில் உள்புற வளாகத்தில் படுத்து உறங்க அந்த இடத்தில் வழக்கமாக துணி பந்தல் அமைக்கப்படும். தீ தடுப்பு முன்னெச்சரிக்கையாக அந்த இடத்தில் தகர ஷீட்டுகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்து.

    சுமார் 50,000 பேர் இந்த சிம்மக்குளம் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி விரிஞ்சிபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நாளை இரவு 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த ப்படுகின்றனர்.

    கோவில் உள்புறம் மற்றும் வாகன நிறுத்துமிடம் விரிஞ்சிபுரம் சாலை உள்ளிட்ட இடங்களில் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியை துரிதப்படுத்தி உள்ளனர்.

    இந்த ஆண்டு பாலாற்றில் நீராட மின்விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. ஆற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    விரிஞ்சிபுரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோத வாய்ப்பு இருப்பதால் பஸ்கள் மட்டுமே செதுவாலையிலிருந்து விரிஞ்சிபுரம் உள்ளே அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

    குறிப்பாக ஆட்டோக்கள் செதுவாலை மெயின் ரோட்டில் இருந்து விரிஞ்சிபுரம் பகுதிக்கு வர முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. கடைஞாயிறு விழாவையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்க படுகின்றன.

    ×