என் மலர்
நீங்கள் தேடியது "Shiva-Parvati figure"
- சிறப்பு பூஜை நடந்தது
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
வேலூர்:
வேலூர் மாவட்டம் செங்காநத்தம் மலையில் 500ஆண்டுகள் பழமையான காலபைரவர் கோவில் உள்ளது.
இந்தக் கோவிலில் இன்று அஷ்டமி திதியை முன்னிட்டு காலபைரவருக்குசிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு பன்னீர் சந்தனம் மற்றும் நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை உடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.






