search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sewage line"

    • சாலையோரமாக கழிவுநீர் செல்ல பாதை அமைக்கப்பட்டு இருந்தது.
    • ஊராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சபரி நகரில், சாலையோரமாக கழிவுநீர் செல்ல பாதை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் அவர் வீட்டிற்கு செல்வதற்காக அந்த கழிவு நீர் பாதையை அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி வார்டு உறுப்பினர் முத்துக்குமாரசாமி மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் மீண்டும் கழிவு நீர் செல்வதற்கு பாதை அமைக்க சென்ற போது அவர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்ப டுகிறது. இதைய டுத்து சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார், வார்டு உறுப்பினர் முத்துக்கு மாரசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்ன ர்பொக்லைன் இயந்திரம் மூலம் கழிவு நீர் பாதை மீண்டும் அமைக்க ப்பட்டது. இதையடுத்து கழிவு நீர் முறையாக சென்றதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×