search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Selection of site"

    • பி.எம் மித்ரா திட்டத்தின் கீழ் ஜவுளி பூங்காவை செயல்படுத்த இடம் தேர்வு செய்யப்படும்.
    • பிரதமர் மோடியையும், மத்திய மந்திரி பியூஷ் கோயலையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறயி ருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பி.எம் மித்ரா திட்டத்தின் கீழ் ஜவுளி பூங்கா அமைக்க விருதுநகர் மாவட்டம்,

    இ.குமாரலிங்கபுரம் கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பூங்காவின் மூலமாக தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் பெரிதும் பயனடையும்.

    தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கா புரத்தில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பி.எம்.மித்ரா) அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டமைக்கு நன்றி தெரிவித்தும், தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்த வேண்டுமென தெரிவித்தும், முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் பிரதமர் மோடி, மத்திய மந்திரி பியூஷ் கோயல் ஆகியோருக்கு 18-3-2023 அன்று கடிதம் எழுதியுள்ளார்.

    தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்கு தேவையான நிலங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் செயல்படும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) இந்த பூங்கா அமையவுள்ள இடத்தில் ஏற்கெனவே 1.052 ஏக்கர் நிலத்தை தன்வசம் வைத்துள்ளதாகவும், அதனால் அந்த நிறுவனம் இந்த திட்டத்தை உடனடியாக அங்கு செயல்படுத்த தயாராக உள்ளது என்றும் தனது கடிதத்தில் முதல்-அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் சிப்காட் நிறுவனம் பெரிய தொழில் பூங்காக்களை நிறுவி தனது திறனை நிரூபித்துள்ளது என்றும், தற்போது மாநிலத்தில் 2 ஆயிரத்து 890 நிறுவனங்கள் 39 லட்சத்து 4 ஆயிரத்து 785 பணியா ளர்களுடன், 38.522 ஏக்கரில் 28 தொழிற்பேட்டைகளை இந்த நிறுவனம் நிறுவியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள முதல்-அமைச்சர் தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் சிப்காட் நிறுவனத்தால் உருவாக்கப்படும் தொழிற் பூங்காக்களில் தொழில் தொடங்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் தனியாரால் மேம்படுத்தப்பட்டுள்ள தொழிற் பூங்காக்கள் குறைந்த அளவிலேயே வெற்றியை கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் பி.எம். மித்ரா ஜவுளி பூங்காவை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தினால் இந்தத் திட்டத்தின் நோக்கங்களை வெற்றிகரமாக அடைய இயலும் என்று தமிழக அரசு உறுதியாக நம்புவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்குத் தேவையான நிலங்களை தன்வசம் வைத்துள்ள சிப்காட் நிறுவனம், ஏற்கெனவே பல்வேறு தொழிற் பூங்காக்களை மேம்படுத்தி செயல்படுத்துவதில் உறுதியான சாதனை நிகழ்த்தியுள்ளதால் தமிழ்நாட்டில் சிப்காட் நிறுவனத்தின் மூலம் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பி.எம் மித்ரா) திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தியப் பிரதமர் மோடியையும், மத்திய மந்திரி பியூஷ் கோயலையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×