என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seizure of gutka products"

    • 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
    • குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுபவர், விற்பவர் மற்றும் கடத்துபவர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி, அப்புக்கல் மற்றும் கூனம்பட்டி ஆகிய மலைப்பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு சம்பந்தமாக நடத்தப்பட்ட சோதனையில் மொத்தமாக சுமார் 22,700 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள், சுமார் 4,687 லிட்டர் கள்ளச்சாராயம், 16 மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    எதிரிகள் மீது 14 கள்ளச்சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    காட்பாடி விரிஞ்சிபுரம் பேரணாம்பட்டு பொன்னை போலீஸ் நிலைய பகுதிகளில் நடத்திய சோதனையில் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    ×