என் மலர்
நீங்கள் தேடியது "Seizure of 1 tonne Gutka"
- வட மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைது
- போலலீசார் விசாரணை
வேலூர்:
திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டம் வழியாக கர்நாடக மாநிலத்தில் இருந்து குட்கா பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் சென்னைக்கு கடத்தப்படு கின்றன.
இதனை தடுக்க தேசிய நெடுஞ்சாலைகளில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சா வடியில் நேற்று இரவு பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமை யிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சொகுசு கார் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் அந்த காரை மடக்கினர். போலீசாரை கண்டதும் கார் நிற்காமல் வேகமாக சென்றது. போலீசார் விரட்டி சென்று காரை மடக்கினர். அதில் சோதனை செய்தபோது கார் முழுவதும் மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா இருந்தது. சுமார் 1 டன் குட்கா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரில் குட்கா கடத்தி வந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த முகேஷ் புரி, ராஜஸ்தானை சேர்ந்த கரண் என்கிற வர்சிராம் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






