search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "secular parties"

    செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில், மதசார்பற்ற கட்சிகளை இணைக்கும் மாநாடு நடத்த முடிவு வெடுத்துள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான ‘அமைப்பாய் திரள்வோம்’ என்ற நூலின் திறனாய்வுக்கூட்டம் புதுவையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நேற்று மாலை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவையில் விளம்பர பேனர்கள் வைக்க கவர்னர் தடை விதித்துள்ளனர். பிற மாநிலங்களில் கட்டணம் வசூலித்துவிட்டு குறிப்பிட்ட இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்க அனுமதிக்கப்படும் முறையை புதுவையிலும் கடைபிடிக்க வேண்டும்.

    தமிழக கவர்னருக்கு எதிராக நாமக்கல்லில் அறவழியில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்திய தி.மு.க.வினரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம், சென்னை-சேலம் இடையே பசுமை சாலை எதிர்ப்பு போராட்டம், கவர்னர் எதிர்ப்பு போராட்டம் ஆகியவற்றில் கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மட்டுமின்றி நச்சு தன்மை கொண்ட தொழிற்சாலைகளை மூடுவதற்கு அரசு சட்டம் இயற்ற வேண்டும்.

    சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தில் விவசாயி கள், பொதுமக்களிடம் கருத்தை கேட்டு அறிந்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பொதுமக்கள் மீது அடக்குமுறையை அரசு மேற்கொள்ளக் கூடாது.

    வருகிற செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில், மதசார்பற்ற கட்சிகளை இணைக்கும் மாநாடு நடத்த முடிவு வெடுத்துள்ளோம்.

    மாநாட்டில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். மாநாட்டில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும்.

    இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

    ×