search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SCjudgeGhose"

    உயர்பதவி வகிப்பவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகாரம் படைத்த லோக்பால் ஆக சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியின் பெயரை தொடர்புப்படுத்தி வரும் தகவலுக்கு அன்னா ஹசாரே வரவேற்பு தெரிவித்துள்ளார். #AnnaHazare #SCjudgeGhose #Lokpal
    புதுடெல்லி:

    தேசிய அளவில் லோக்பாலையும், மாநில அளவில் லோக் ஆயுக்தாவையும் அமைக்க வேண்டும், விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார்.  

    இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தன்னுடைய சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ரலேகன் சித்தியில் காந்தி நினைவு நாளான 30-1-2019 அன்று அன்னா ஹசாரே மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

    7-வது நாளாக  தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அன்னா ஹசாரேவை மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்தார். அப்போது, வரும் சட்டசபை தொடரில் லோக்பாலுக்கான புதிய மசோதா அறிமுகப்படுத்தப்படும் என முதல் மந்திரி பட்னாவிஸ் வாக்குறுதி அளித்தார். இதையடுத்து, 5-2-2019 அன்றிரவு தனது உண்ணாவிரதத்தை ஹசாரே முடித்துக் கொண்டார்.



    இந்நிலையில், நாட்டில் முதன்முறையாக மத்தியில் லோக்பால் நீதிபதியாக நியமிக்கப்படவுள்ள நபர்களின் பெயர்களை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

    ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதியும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினருமான நீதிபதி பினாக்கி சந்திரா கோஸ் பெயர் இந்த பதவிக்கான இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

    இந்த முடிவுக்கு அன்னா ஹசாரே வரவேற்பு தெரிவித்துள்ளார். இதன் மூலம் எங்களது 48 ஆண்டுகால போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். #AnnaHazare #SCjudgeGhose #Lokpal
    ×