search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SC Refuses"

    அயோத்தி நிலப் பிரச்சினை தொடர்பான மறுஆய்வு விவகாரத்தை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. #AyodhyaMatter #IsmailFaruquiCase #SupremeCourt
    புதுடெல்லி:

    உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் எவருக்குச் சொந்தம் என்பது தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறுகிறது.

    கடந்த 1950-ஆம் ஆண்டில் ஹிந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த கோபால் சிங் என்பவர் அயோத்தி நிலத்துக்கு உரிமை கோரி முதன்முதலாக மனுதாக்கல் செய்தார். அதேபோன்று இஸ்லாமிய அமைப்பு சார்பில் சித்திக் என்பவரும் மனு தாக்கல் செய்தார். மனுதாரர்கள் இருவருமே இறந்துவிட்ட நிலையிலும், அதுதொடர்பான வழக்கு இன்னமும் நிலுவையில் இருந்து வருகிறது.
     
    இதனிடையே, ராமஜென்ம பூமி தொடர்பாக எம்.இஸ்மாயில் ஃபரூக்கி என்பவர் தொடுத்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கடந்த 1994-இல் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில், மசூதிகள் முஸ்லிம் மதத்துடன் ஒருங்கிணைந்த இடங்கள் அல்ல என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்தத் தீர்ப்பை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் மூலம் மறுஆய்வு செய்யக் கோரி முஸ்லிம்கள் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ். அப்துல் நஸீர் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்தது.



    அப்போது, மசூதிகள் இஸ்லாம் மதத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு உட்பட்டதல்ல என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யும் விவகாரத்தை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி அசோக் பூஷன் ஆகியோர் மறுத்துவிட்டனர். 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வே சர்ச்சைக்குரிய அயோத்தி இட விவகாரம் குறித்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும் எனவும் தெரிவித்தனர்.

    இந்த மனுக்கள் விசாரணைக்கு தகுதியானதா? என்பதை முடிவு செய்வதற்கான விசாரணை அக்டோபர் 29-ம் தேதி தொடங்கும் என்றும் அறிவுறுத்தினர்.

    அத்தியாவசிய மத நடைமுறையை பொருத்தவரை மிகப்பெரிய அமர்வுதான் முடிவு செய்ய வேண்டும் என மற்றொரு நீதிபதி நசீர் தெரிவித்தார். #AyodhyaMatter #IsmailFaruquiCase #SupremeCourt
     
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியான 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் பிரச்சினை தொடர்பான மனுக்களை உடனடியாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. #SupremCourt #Thoothukudifiring
    புதுடெல்லி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 6 பேரின் உடல்கள் இன்னும் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளன.

    தாங்கள் குறிப்பிடும் மருத்துவ வாரியத்தில் உள்ள டாக்டர்கள் மூலம் அந்த உடல்களை பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடவேண்டும் என்றுகோரி கோரி அவர்களின் குடும்பத்தினர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 லட்சமும் வழங்க உத்தரவிடவேண்டும் என்றும் கோரி மேலும் 2 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

    மனுதாரர்கள் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறை கால அமர்வு முன்பு ஆஜரான வக்கீல், இந்த மனுக்களை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த மனுக்கள் வருகிற ஜூலை 1-ந்தேதிக்கு பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். 
    ×