search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sayesha"

    தமிழில் கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை சாயிஷா, தற்போது கன்னடத்தில் பிரபல நடிகருக்கு ஜோடியாகி இருக்கிறார். #Sayesha
    வனமகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சாயிஷா கடந்த ஆண்டு கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் என மூன்று படங்களில் நடித்திருந்தார். கடைக்குட்டி சிங்கம் படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி வரும் இவர் தெலுங்கில் அகில் திரைப்படத்திலும் இந்தியில் ஷிவாய் படத்திலும் நடித்து கவனம் பெற்றுள்ளார். தற்போது கன்னடத் திரையுலகிலும் அறிமுகமாக உள்ளார்.

    சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கத்தில் யுவரத்னா எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். புனித் ராஜ்குமார் ஏற்கனவே சந்தோஷ் இயக்கத்தில் நடித்த ராஜகுமாரா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. 



    சாயிஷா தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துவருகிறார். இதில் ஆர்யா, மோகன்லால், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் இடையே மார்ச் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
    கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த ஆர்யா, சாயிஷா இருவரும் காதலிப்பதாக செய்திகள் வந்த நிலையில், தற்போது திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. #Arya #Sayesha
    நடிகர் ஆர்யாவை பொறுத்தவரை அவருடன் ஜோடியாக நடிக்கும் கதாநாயகிகளுடன் கிசுகிசு வருவது வழக்கமான ஒன்று. பூஜா, எமி ஜாக்சன், நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா என பல கதாநாயகிகளுடன் அவர் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். உடன் நடிக்கும் நடிகைகளுக்கு அவர் பிரியாணி விருந்து கொடுத்து அவர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது வழக்கம் என்பார்கள்.

    இதுவரை வந்த பல கிசுகிசுக்கள் எவ்வளவு வேகமாக பரவியதோ அவ்வளவு வேகமாக பொய் ஆகியது. ஆர்யாவை திருமணம் செய்துகொள்ளும்படி நண்பர்களும் குடும்பத்திலும் வற்புறுத்துகின்றனர். ஆனால் பொருத்தமான பெண் கிடைக்காமல் தவித்து வந்தார் ஆர்யா. இதனால் மணப்பெண்ணை தேர்வு செய்ய நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அதிலும் அவருக்கு பொருத்தமான பெண் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்தார் சாயிஷா. இருவரும் ஜோடியாக நடித்தது முதல் இணைபிரியாத நண்பர்களாகிவிட்டனர். தினமும் செல்போனில் மணிக் கணக்கில் பேசுவதுடன், செய்திகளும் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்களின் நட்பு காதலாக மலர்ந்திருக்கிறது என்கிறார்கள்.



    இதை அடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தங்களது விருப்பத்தை இருவரும் அவரவர் பெற்றோரிடம் கூறியபோது குடும்பத்தினரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்களாம்.
    ×