என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Satak College"

    • கீழக்கரை முகம்மது சதக் கல்லூரியில் கட்டிடக்கலை டிப்ளமோ பாடப்பிரிவு பொன்விழாவை முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ளது.
    • அறக்கட்டளை முதல் கல்லூரியாக 1980-ல் ஆரம்பிக்கப்பட்டது முஹம்மது சதக் பாலி டெக்னிக் கல்லூரி ஆகும்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய பகுதியான ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டார கிராமப்புற மக்களின் பொருளாதாரம், கல்வி மேம்பாட்டிற்காக வள்ளல் பாரம்பரியம் கொண்ட முஹம்மது சதக் குடும்பத்தா ரால் 1973-ம் ஆண்டு முஹம்மது சதக் அறக் கட்டளை தொடங்கப்பட்டது.

    போற்றுதலுக்கும் பெரு மைக்கும் உரிய முஹம்மது சதக் அறக்கட்டளையானது 50 ஆண்டு நிறைவடைந்து பொன்விழா காண்கிறது. இதையொட்டி தமிழ்நாட்டி லேயே முதன் முதலாக தொடங்கப்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரி என்ற பெருமையை உடைய முகமது சதக் அறக்கட்டளை யின் கீழ் இயங்கம் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி 1984-ம் ஆண்டு முதல் இன்று வரை பல இளநிலை, முதுநிலை படிப்புகளை வழங்கி வருகிறது. அன்றிலிருந்து இன்று வரை தேசிய மற்றும் உலக தரம் வாய்ந்த தொழில் நிறுவனங்கள் எதிர்நோக்கும் சிறப்புமிக்க தரமான தொழில் கல்வியை பொறி யியல் கல்லூரிகள், தொழில் நுட்பக் கல்லூரியும் வழங்கி வருகிறது.

    மேல்நிலைப்பள்ளி தொடங்கி பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பார்மஸி, பிசியோதெரபி, நர்சிங், மருத்துவ அறிவியல் கல்லூரி உள்பட 17 கல்வி நிறுவனங்களை எங்கள் அறக்கட்டளை கீழக்கரை, ராமநாதபுரம் மற்றும் சென்னையில் சீரோடும் சிறப்போடும் நடத்தி வருகிறது.

    சாதி, சமய, இன வேறு பாடின்றி சேவை மனப் பான்மையுடன் தரமான கல்வியை வழங்கி நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடு படுவதே முஹம்மது சதக் அறக்கட்டளையின் நோக்க மாகும்.

    அறக்கட்டளை முதல் கல்லூரியாக 1980-ல் ஆரம்பிக்கப்பட்டது முஹம்மது சதக் பாலி டெக்னிக் கல்லூரி ஆகும்.பொன் விழாவையொட்டி தமிழ்நாட்டில் முதல் முறை யாக கட்டிடக்கலையில் டிப்ளமோ பாடப்பிரிவு நடப்பாண்டு தொடங்கப் பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை முகம்மது சதக் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×