search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sani dosham"

    ஏழரைச்சனி என்பது மூன்று இரண்டரை வருடங்களை கொண்ட ஒரு அமைப்பு. ஒருவரின் ராசிக்கு பின் ராசியான பனிரெண்டாமிடத்தில் சனி நுழைவது விரையச் சனி எனப்படுகிறது.
    ஏழரை வருடங்கள் தொடரும் இந்த அமைப்பில் விரயச் சனி, ஜென்மச் சனி, பாதச் சனி என்பதைப் பற்றியும், ஒரு மனிதனின் வாழ்நாளில் முப்பது வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் இந்நிகழ்வில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று எனப்படும் மங்குசனி, பொங்குசனி, மரணச்சனி என்ற மூன்று சுற்றுக்களையும் பற்றிய விளக்கங்களை அநேகர் கேட்டிருக்கிறீர்கள்.

    ஏழரைச்சனி என்பது மூன்று இரண்டரை வருடங்களை கொண்ட ஒரு அமைப்பு. ஒருவரின் ராசிக்கு பின் ராசியான பனிரெண்டாமிடத்தில் சனி நுழைவது விரையச் சனி எனப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் ஒரு மனிதருக்கு வருமானங்களை சனி தந்தாலும் அவற்றை சேமிக்க முடியாமல் விரயம் செய்வார் என்று இதைப் பற்றிய அனுபவ ஜோதிட நூல்கள் சொல்கின்றன. இது ஒரு பொதுப் பலன்தான்.

    மிக முக்கியமாக இந்த முதல் இரண்டரை ஆண்டு காலத்தில் ஒரு மனிதர் ஏழரைச் சனியின் கெடுபலன் தாக்கத்தை உணர்வது இல்லை. இன்னும் சொல்லப் போனால் சிலருக்கு அதீதமான பொருள் வரவும் விரயச்சனி காலத்தில் கிடைக்கவே செய்கிறது. இந்த காலகட்டத்தில் ஒரு மனிதனிடம் தாராளமாகவே பணம் இருக்கும்.

    ஏழரைச்சனியின் நடுப்பகுதியும், கடுமையான கெடுபலன்களைச் செய்வதுமான, ஒரு மனிதனின் சொந்த ராசியில் இரண்டரை வருடங்களுக்கு சனி இருக்கும் நிலையே, ஜென்மச்சனி எனப்படுகிறது. இந்த இரண்டரை ஆண்டு காலத்தில், ஒருவரின் சொந்த நட்சத்திரத்தில் சனி செல்லும் ஏறத்தாழ ஒரு ஆண்டு காலத்தில் மிகக் கடுமையான கெடுபலன்களை தருவார். அதிலும் 40 வயதுக்குள் வரும் சனி இந்த நிலைமையை கண்டிப்பாக செய்யும்.

    சுய நட்சத்திரத்தில் சனி செல்லும்போது ஒரு மனிதனுக்கு வாய்விட்டு அழும்படியான கடுமையான மன அழுத்தம் உள்ள நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த காலகட்டத்தில் ஒரு மனிதனுக்கு எது பிடிக்காதோ அது நடக்கும். அவனை எது பாதிக்குமோ அந்த விஷயத்தில் சனி கடுமையான கெடுபலன்களைச் செய்வார், இது வயதிற்கு ஏற்றார் போல நடக்கும்.

    இந்த நேரத்தில்தான் ஒரு இருபது வயது வாலிபனை, வயதிற்கேற்றார் போல காதல் தோல்வியிலும், முப்பது வயதுகளில் இருப்பவனை தொழில் அமைப்புகளிலும், நாற்பதில் இருப்பவனை தொழில், குடும்ப அமைப்புகளிலும் கடுமையான சிக்கல்களை சனி தருவார். சிலருக்கு நெருங்கிய உறவினர் மரணத்தின் மூலமாக மனப்பதட்டத்தைத் தருவார்.

    கோட்சாரத்தில் ஒருவரின் ஜென்ம ராசியில் இருளாகிய சனி அமரும்போது, அவனது மனதை ஆளுமை செய்து தவறான வழியில் செல்லவோ, முடிவெடுக்கவோ வைக்கிறார். ராசியில் சனி இருக்கும் போது தனது கெடுபலன் தரும் கொடிய பார்வை மூலம் அந்த மனிதனின் தைரியம், நற்பெயர் ஆகியவற்றிற்கு காரணமான மூன்றாமிடத்தைப் பார்த்து, அவனது பெயரைக் கெடுத்து, தைரியத்தைக் குலைத்து எதிர்காலம் பற்றிய மனபயத்தை உண்டு பண்ணுவார். ஜென்ம ராசியில் சனி இருக்கும்போது அவரது பத்தாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால்தான் ஜென்மச் சனி நடக்கும்போது வேலையிழப்பு, சஸ்பென்ட். தொழில் சரிவு போன்றவைகள் நடக்கின்றன.

    பாதச் சனி எனப்படும் ராசிக்கு இரண்டாமிடத்திற்கு சனி மாறியவுடன் இதுநாள் வரை நடந்த கெடுபலன்கள் குறைய ஆரம்பிக்கும். ஆனாலும் இந்த நிலையில் முழுமையான நன்மைகள் நடந்து விடுவது இல்லை. சனி முழுவதுமாக முடிந்ததும் அந்த மனிதர் செட்டிலாகும் வாழ்க்கை வாழ்வதற்கான ஆரம்பங்கள் இந்த பாதச் சனி அமைப்பில் நடக்கும்.

    மங்கு, பொங்கு, மரணச்சனி விஷயத்தை எடுத்துக் கொண்டால், பிறந்த உடன் முதலில் வருகின்ற சனி மங்கு சனி எனவும், இந்த சனி கெடுபலன்களைத் தரும் எனவும், இரண்டாவது முப்பது வருடங்களில் வருகின்ற சனி பொங்கு சனி எனவும், அது நல்ல பலன்களைத் தரும் எனவும், மூன்றாவதாக முப்பது வருடங்களில் வரும் சனி மரணச்சனி எனவும், அது முதல் சுற்று சனியைப் போலவே கெடுபலன்களைக் கொடுத்து ஒரு மனிதனின் ஆயுள், ஆரோக்கியத்தை குலைக்கும் எனவும் ஜோதிடர்களால் விளக்கப்படுகிறது.



    இதில் சிலர் புரிந்து கொள்ளாத ஒரு முரண்பாடு என்னவெனில் குழந்தையாய் இருக்கும் போது வருகின்ற ஏழரைச்சனியை மங்கு சனி எனவும், அடுத்த முப்பது வயதுகளில் வரும் சனியை இரண்டாவது சுற்று பொங்கு சனி எனச்சொல்லி முப்பது வயதுகளில் வரும் சனி நல்லது செய்யும் என தவறாக நினைத்துக் கொள்கிறார்கள்

    உண்மையில் ஏழரைச் சனி என்பது ஒரு மனிதன் எதிர்காலத்தில் நல்லவிதமாக வாழ்வதற்கான அனுபவங்களையும், பணம் என்றால் என்ன என்பதைப் பற்றிய நேரடி அனுபவத்தையும் தருகின்ற ஒரு அமைப்பு என்பதால் சனிக்கு எவரும் விதிவிலக்காக இருக்க முடியாது. எத்தனை பெரிய யோக ஜாதகமாக இருந்தாலும் அந்த ஜாதகத்திற்கு ஏற்ப சனியின் கெடுபலன்கள் இருக்கவே செய்யும்.

    பூமியில் பிறக்கும் எவரும் ஏழரைச்சனிக்கு விதிவிலக்காக இருக்க முடியாது விபரம் தெரியாத குழந்தைப் பருவமான ஏறத்தாழ 15 வயது வரை வருகின்ற ஏழரைச் சனியை ஒருபோதும் கணக்கில் எடுத்துக் கொள்ளவே கூடாது. ஒருவரின் கர்மா விழிக்காத பருவத்தில் வரும் சனி அவருக்கு நல்ல, கெட்ட பலன்களைச் செய்யாது. அந்தப் பருவத்தில் வரும் சனி அவரது பெற்றோருக்கும், குடும்பத்திற்கும் மட்டுமே தீமைகளைச் செய்யும். அதன் மூலம் அந்தக் குழந்தையும் பாதிக்கப்படும்.

    ஒருவருக்கு பத்து வயதில் ஏழரைச்சனி முடிந்திருக்குமாயின், முப்பத்து மூன்று வயதில் இன்னொரு சுற்று சனி ஆரம்பமாகும். அதனை பொங்கு சனி என்று சொல்லி அந்த இரண்டாம் சுற்று நன்மைகளைச் செய்யும் என்று கணக்கிட கூடாது. உண்மையில் அவருக்கு விபரம் தெரிந்த வயதான இந்த 33 வயதில் வருகின்ற சனியே அவருக்கு முதல் சுற்று சனி போன்ற அனுபவங்களை கொடுத்து கெடுபலன்களை செய்யும்.

    குறிப்பாக இந்த வயதில் வரும் சனி, வேலை தொழில் விஷயங்களில் அவருக்கு சில நிர்ப்பந்தங்களைக் கொடுத்து, தேவையற்றவைகளில் அவரைத் தள்ளி, வயதிற்கேற்ற தொழில், சொந்த வாழ்க்கைகளில் சாதகமற்ற பலன்களை தந்து வாழ்க்கை அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கும். முப்பது வயதுகளில் இருக்கும் மனிதருக்கு பொங்கு சனி எனப்படும் இரண்டாம் சுற்று சனி பலன் தராது.

    உண்மையில் சற்று விபரம் தெரிந்த இளம்பருவமான இருபது வயதுகளில் இருக்கும்போது நடக்கும் முதல் சுற்று ஏழரைச் சனியை, மங்கு சனி என்று சொல்லி, அடுத்த 50 வயதுகளில் நடக்கும் இரண்டாம் சுற்று சனியை பொங்கு சனி என்று சொல்லலாம். ஐம்பது வயதுகளில் வரும் சனி பெரிய கெடுதல்களை தருவதில்லை. மாறாக நன்மைகளைச் செய்யும்.

    சுருக்கமாக கவனிக்க வேண்டியது என்னவெனில், முதல் சுற்று ஏழரைச் சனி நடக்கும்போது சம்பந்தப்பட்ட மனிதருக்கு, வயதிற்கேற்ற மன அழுத்தங்களை, தோல்விகளை, வாழ்க்கையைப் பற்றிய புரிதல்களை சனி கொடுத்திருந்தால் மட்டுமே அது மங்கு சனியாக இருக்கும். விபரம் தெரியாத குழந்தைப் பருவத்தில் வரும் ஏழரைச் சனியை கணக்கில் எடுத்துக் கொள்ளவே கூடாது.
    ஒருவரின் எதிர்காலத்தைச் சொல்லும் மாபெரும் அறிவியலான வேத ஜோதிடத்தின் நிரந்தரமான விதிகளில் ஏழரைச் சனியும் ஒன்று. ஏழரைச்சனி தரும் அவஸ்தைகளை அறிந்து கொள்ளலாம்.
    ஒருவரின் எதிர்காலத்தைச் சொல்லும் மாபெரும் அறிவியலான வேத ஜோதிடத்தின் நிரந்தரமான விதிகளில் ஏழரைச் சனியும் ஒன்று. கோட்சார நிலையில் வரும் ஏழரைச் சனி அமைப்பு சில நிலைகளில் ஒரு மனிதனை தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடுகிறது.

    இந்திய ஜோதிட முறைகள் அனைத்திற்கும் தாய் என்று சொல்லப்படக் கூடிய பாரம்பரிய ஜோதிட முறையானது மிகப் பெரிய நுணுக்கங்களையும், சூட்சுமங்களையும் தன்னகத்தே கொண்டது. இந்த முறையில் ஒரு மனிதனின் எதிர்காலத்தை அறிவதற்கு அவனது ஜாதகத்தில் லக்னம், ராசி எனப்படும் இரு முக்கிய அமைப்புகளையும் ஒரு சேரக் கணிக்க வேண்டும்.

    வேத ஜோதிடம் லக்னம், ராசி எனும் இரு சக்கரங்களைக் கொண்டது. இந்த இரண்டில் ஒன்று இல்லாவிட்டாலும் வண்டி நகராது. ஒரு மனிதனின் எதிர்காலம் என்பது மாறாத பிறந்த ஜாதகத்தின் லக்னத்தையும், மாறிக் கொண்டே இருக்கும் கோட்சார நிலையின் மூல அமைப்பான ராசியையும் இணைத்துப் பார்க்கப்பட வேண்டும்.

    ஜாதகம் என்பது ஒருவரின் பிறந்த நாளன்று, வானில் இருந்த கோள்களின் நிலைதான். இது மாறவே மாறாத ஒன்று. கோட்சாரம் எனப்படுவது மாறிக் கொண்டே இருக்கும் தற்போதைய வான் கிரக நிலையைச் சொல்லுவது. மாறாத பிறந்த ஜாதகத்தையும், மாறிக்கொண்டே இருக்கும் கோட்சார நிலைகளையும் இணைத்துதான் ஒரு மனிதனின் எதிர்காலத்தை துல்லியமாக அறிய முடியும். இதுவே ஒரு சுவையான முரண்பாடுதான்.

    பாபக் கோள்களான சனி, செவ்வாய், ராகு, கேது ஆகியவை நமது ராசிக்கு பார்வை, இணைவு எனும் தொடர்பைப் பெறும்போது எதிர்மறைச் சக்திகள் தூண்டப்பட்டு மனம் செயலிழக்கிறது. இந்த அமைப்பினால் அந்தக் காலகட்ட வாழ்க்கையில் தவறான முடிவுகளை எடுத்து தோல்விகளைச் சந்திக்கிறோம்.
    இதில் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் இருக்கக் கூடிய, மிக மெதுவாக நகரும் தன்மை கொண்ட பாபக் கோளான சனி, ஒரு மனிதனின் ராசிக்கு முன்பின் இடங்களான 12, 2 மற்றும் அவனது ராசியில் இருக்கும் ஏழரை ஆண்டு காலமே ஏழரைச்சனி என்று குறிப்பிடப்படுகிறது.

    மனம் என்பது ஒருவருக்கு வயதுக்கு ஏற்றபடிதான் செயல்படும். இருபது வயதில் உங்களுக்கு முக்கியமாகப் படுகின்ற ஒரு விஷயம் ஐம்பது வயதில் சாதாரணமாகத் தெரியும். சனி ராசியை இருளாக்கி ஆக்கிரமிக்கும் போது ஒருவரின் மனம் அழுத்தம் தரும் சம்பவங்களைச் சந்திக்க வேண்டும் என்பதால் இருபது வயதுகளில் ஏழரைச்சனி நடக்கும்போது ஒருவர், இளம்வயதிற்கே உரிய காதல், படிப்பு போன்றவைகளில் மன அழுத்தத்தை அடைகிறார்.
    இதுவே முப்பது வயதுகளில் இருப்பவருக்கு திருமணம், குழந்தை போன்றவைகளிலும், நாற்பதுகளில் உள்ளவருக்கு அந்த வயதிற்கே உரிய வேலை, தொழில் போன்றவைகளிலும் சங்கடங்கள் நிகழ்கின்றன.



    ஜோதிடத்தை ஆய்வு நோக்கோடு பார்க்க விரும்புபவர்கள் மற்றும் இந்த மாபெரும் கலையை மறுக்கின்ற பகுத்தறிவாளர்கள் அனைவருமே உலகில் பிறக்கும் மனிதர்களின் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி காலங்களை நடுநிலையோடு ஆராயும்போது நிச்சயமாக அவர்களுக்கும் உண்மை புலப்பட்டே தீரும்.

    உண்மையில் கடுமையான ஏழரைச் சனி மற்றும் அஷ்டம சனி காலங்களில் ஒரு மனிதனின் ஜாதகம் எத்தனை பெரிய யோகமான அமைப்பில் இருந்தாலும் செயலற்றுப் போய்விடும்

    ஏழரைச்சனி பற்றி பாரம்பரிய ஜோதிடத்தில் ஏராளமான நுணுக்கங்கள் இருக்கின்றன. ஒரு தகப்பன் அல்லது குடும்பத் தலைவனின் நேரம் நன்றாக இருந்தாலும், அவனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு, அல்லது குழந்தைகளில் ஒருவருக்கு கடுமையான ஜென்மச்சனி நடப்பில் இருக்கும் போது அந்தக் குடும்பத்தில் கெடுபலன்கள் நடக்கின்றன.

    குறிப்பாக குடும்பத் தலைவனின் தொழில் மற்றும் வேலைகளில் சிக்கல்கள் உண்டாகி, அவனை பொருளாதார சிக்கல்களில் சிக்க வைத்து கடன், நோய் போன்ற சிரமங்களைத் தருகின்றன. இதை நான் அடிக்கடி எனது மாணவர்களுக்கு சொல்லுகிறேன்.

    குடும்பம் என்பது ஒரே உயிர் போன்றது. கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் என்ற குடும்பத்தில் ஒருவருக்கு நடக்கும் கெடுபலன் இன்னொருவரை பாதிக்கவே செய்யும். ஆகவே ஜோதிடப்படி ஒருவருக்கு துல்லியமான பலன் சொல்ல வேண்டும் என்றால், குடும்பத்தில் இருக்கும் அனைவரின் ஜாதகத்தையும் பார்த்து, குடும்ப உறுப்பினர்கள் எவருக்காவது ஏழரைச்சனி, அஷ்டமச்சனி நடக்கிறதா என்பதைக் கருத்தில் கொண்டுதான் பலன் சொல்ல வேண்டும்.

    பலர் ஒருவருடைய வாழ்க்கையில் வரும் ஏழரைச்சனியே கடுமையான கஷ்டங்களைத் தரும் என்று நினைக்கிறார்கள். உண்மையில் நமது மூல நூல்களில் அஷ்டமச் சனியே, ஒருவருக்கு மிகப்பெரிய கஷ்டங்களைத் தரும் என்றும், ஏழரைச்சனி அதற்குக் குறைவான கெடுபலன்களைத் தரும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

    உண்மையில் அஷ்டமச்சனியே நெருங்கிய உறவினர் மரணம், கடுமையான இழப்பு போன்ற கெடுதல்களை அதிகம் தருகிறது.

    ஒருவருக்கு கடுமையான ஜென்மச் சனி மற்றும் அஷ்டமச்சனி நடக்கும்போது, மற்ற எந்தக் கிரகப் பெயர்ச்சியும் பலன் தராது, சனியின் கொடுமைகள் மட்டுமே முன் நிற்கும். சனியின் ஆதிக்கத்தின் முன் மற்ற கிரகங்கள் சாதகமான இடத்தில் இருந்தாலும் பலன் தராது.

    கடுமையான ஜென்மச் சனி, அஷ்டமச் சனி காலங்களில் ஒருவருக்கு சனியின் எதிர்மறை ஆதிக்கம் மட்டுமே மேலோங்கி நிற்கும். அந்த மனிதர் எத்தகைய ராஜயோக ஜாதகத்தைக் கொண்டிருந்தாலும் அது பலன் தராது.
     
    ×