search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sand robbers"

    • மணல் கொள்ளையர்கள் போலீஸை கண்டதும் மாட்டுவண்டியை நிறுத்தி விட்டு தப்பி ஓடினர்.
    • மலட்டாறு வாய்க்காலில் அனுமதி இன்றி மர்ம நபர்கள் 3 மாட்டு வண்டியில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே ஆனத்தூர் தொட்டிமேடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மலட்டாறு வாய்க்காலில் அனுமதி இன்றி மர்ம நபர்கள் 3 மாட்டு வண்டியில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அப்போது போலீசார் வருவதை கண்டவுடன் மாட்டு வண்டியை அப்படியே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். உடனே போலீசார் 3 மாட்டு வண்டியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர். 

    ×