search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sameer Wankhede"

    மும்பை போதைப்பொருள் வழக்கில் இருந்து சமீர் வான்கடே நீக்கப்பட்டு, மும்பையில் உள்ள பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மை இயக்குநரகத்திற்கு மாற்றப்பட்டார்.
    புதுடெல்லி :

    மராட்டிய மாநிலத்தில் கடந்த ஆண்டு, சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக, பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 20 பேரை என்.சி.பி., எனப்படும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

    அப்போது, மும்பை மண்டல என்.சி.பி., இயக்குனராக இருந்த சமீர் வான்கடே, இந்த கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் ஆர்யன் கானை வழக்கிலிருந்து விடுவிக்க லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத்தொடர்ந்து மும்பை போதைப்பொருள் வழக்கில் இருந்து சமீர் வான்கடே நீக்கப்பட்டு, மும்பையில் உள்ள பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மை இயக்குநரகத்திற்கு மாற்றப்பட்டார்.

    இந்த சூழ்நிலையில் போதை மருந்து வழக்கில் சிக்கிய ஆர்யன் கான் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலையானார். இந்நிலையில் மும்பையிலிருந்து சென்னையில் உள்ள வரி சேவை இயக்குநரகத்திற்கு சமீர் வான்கடே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    சொகுசு கப்பலில் நடத்தப்பட்ட சோதனை போலியானது என மகாராஷ்டிர மந்திரி நவாப் மாலிக் குற்றம் சாட்டினார்.
    மும்பை :

    போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த மாதம் 2-ம் தேதி மும்பை - கோவா சொகுசு கப்பலில் சோதனை நடத்தினர். அப்போது போதை விருந்தில் பங்கேற்ற நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்(23), உள்ளிட்டவர்களை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தற்போது ஆர்யன்கான் உள்ளிட்டோருக்கு மும்பை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது. 

    ஆர்யன்கானை கைது செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மீது மகாராஷ்டிர மந்திரி நவாப் மாலிக் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். குறிப்பாக, சொகுசு கப்பலில் நடத்தப்பட்ட சோதனை போலியானது என கூறினார்.

    இதற்கிடையே, போதைப் பொருள் வழக்கில் பொது சாட்சியான பிரபாகர் சாயில், போதைப் பொருள் வழக்கில் ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக குற்றம்சாட்டினார். 

    இந்நிலையில்,  என்.சி.பி அதிகாரி சமீர் வான்கடே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சய் சிங் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு ஆர்யன்கான் உள்பட ஏனைய 4 பேர் மீதான போதைப் பொருள் வழக்கை விசாரிக்க உள்ளது என போதைப் பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

    ×