என் மலர்
நீங்கள் தேடியது "Salt Hattuva festival"
- ஆண்டுதோறும் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இப்பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.
- இந்த பண்டிகை மூலம் வறட்சி நீங்கி, மழை பொழிந்து, ஆரோக்கியம் மேம்படும் என்று தெரிவித்தனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் குடியிருப்பு பகுதியை ஹட்டி என்று கூறுவார்கள். அவர்கள் ஆண்டுதோறும் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உப்புஹட்டுவ என்ற பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். நேற்று கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உப்பு ஹட்டுவ பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி நேற்று காலை அவரவர் வீட்டில் இருந்து ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து உப்பு, பச்சை கடலை, புல் வகைகள் என கொண்டு வந்து ஆற்றில் கரைத்தனர். பின்னர் ஆடு, மாடுகளுக்கு உப்பு தண்ணீர் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த பாரம்பரிய வழக்கம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைவரும் இயற்கை தெய்வத்தை வழிபட்டு, பின்பு காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட இலை, செடிகளை, வீட்டிற்கு கொண்டு சென்று, அதை வீட்டின் முற்றத்தில் தொங்கவிடுவர். இதன் காரணமாக தங்களுக்கு நோய், நொடிகள் வராமல் இருக்க அந்த செடிகள் உதவும் என்பது நம்பிக்கை.
மேலும் ஆடு, மாடுகள் உப்பு தண்ணீர் குடிப்பதால், காலையில் இருந்து இரவு வரை மேய்ச்சலுக்கு எங்கு சென்றாலும் வீட்டுக்கு திரும்பி வரும் என்ற நம்பிக்கையில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டது.
மேலும் வீட்டில் பாயாசம் தயாரித்து தங்கள் ஊரில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர். ஒவ்வொரு ஆண்டும் படுகர் இன மக்களின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த பண்டிகை கொண்டா டப்படுகிறது. இந்த பண்டிகை மூலம் வறட்சி நீங்கி, மழை பொழிந்து, ஆரோக்கியம் மேம்படும் என்று தெரிவித்தனர்.






