search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem child died"

    சேலம் அருகே ஜூஸ் என நினைத்து மண் எண்ணையை குடித்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள எம்.பெருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவரது 2 வயது ஆண் குழந்தை இன்பன்.

    இந்த குழந்தை கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜூஸ் என நினைத்து வீட்டில் இருந்த மண் எண்ணையை குடித்து மயங்கி கிடந்தது. இதை பார்த்த உறவினர்கள் குழந்தையை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தது. இதை பார்த்த பெற்றோர் கதறி துடித்தனர். சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வீட்டில் மண் எண்ணையை குழந்தைக்கு எட்டும் தூரத்தில் வைத்ததால் இந்த குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது. இது குறித்து எத்தனை முறை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் தொடரும் இந்த சம்பவங்களால் அந்த பகுதியில் சோகம் ஏற்பட்டுள்ளது.

    ×