search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sakarankovil"

    • முத்துமாரி பட்டப்படிப்பு முடித்துவிட்டு, சங்கரன்கோவில்-திருவேங்கடம் சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
    • சம்பவத்தன்று அவர் வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி தனலெட்சுமி(வயது 43). இவர்களது மகள் முத்துமாரி(24). இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, சங்கரன்கோவில்-திருவேங்கடம் சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அவர் வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் மதியம் வீட்டுக்கு சாப்பிட வரவில்லை. இதையடுத்து முத்துமாரியை தேடி அவரது பெற்றோர் அந்த நிறுவனத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவரை காணவில்லை. மேலும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் அவரது பெற்றோர் சங்கரன்கோவில் டவுன் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துமாரியை தேடி வருகின்றனர்.

    ×