search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rural Livelihood Movement"

    • 21 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளது.
    • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.

    இது குறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அவிநாசி, குடிமங்கலம், மூலனூர், காங்கயம், குண்டடம், பல்லடம், பொங்கலூர், திருப்பூர், உடுமலைப்பேட்டை, ஊத்துக்குளி வெள்ளகோவில் ஆகிய வட்டாரங்களில் உள்ள தற்காலிக 21 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கீழ்க்காணும் தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளது.

    வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூடிய கணிணி படிப்பிற்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். 28 வயதுக்குள் இருக்க வேண்டும். பெண் பாலினத்தவராக இருக்க வேண்டும்.

    குறைந்த பட்சம் 2 வருடம் இதே போன்ற திட்டங்களில் பணிபுரிந்திருக்க வேண்டும். பேச்சுத்திறன் மற்றும் தலைமைத்திறன் கொண்டிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட வட்டாரத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். வட்டார ஒருங்கிணைப்பாளரின் ஊதியம்:ரூ.12,000.தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு,இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் / மகளிர் திட்டம்,நம்பர்.305, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம்,திருப்பூர் -641 604,தொலைபேசி எண். 0421 2971149 என்ற முகவரிக்கு நேரிலோ / தபால் மூலமாகவோ9.2.2023-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் . இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    • வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் பணியிடங்களுக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம்.
    • மொத்தம் 14 வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    திருப்பூர் :

    ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரிய மேலாளா்கள், வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் பணியிடங்களுக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மூலனூா், திருப்பூா், பொங்கலூா், வெள்ளக்கோவில் ஆகிய வட்டாரங்களில் 4 தற்காலிக வட்டார இயக்க மேலாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல, காங்கயம், பல்லடம், பொங்கலூா், குண்டடம், தாராபுரம், ஊத்துக்குளி, வெள்ளக்கோவில் ஆகிய வட்டங்களில் 10 வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் என மொத்தம் 14 பணியிடங்கள் காலியாக உள்ளன.

    இதில், வட்டார இயக்க மேலாளா் பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், குறைந்தது 6 மாதங்கள் எம்.எஸ்.ஆபீஸ் சான்றிதழுடன் கூடிய பயிற்சி பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியல் மற்றும் கணினி அப்ளிகேஷன் பட்டப்படிப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தப் பணிக்கு 28 வயதுக்கு உள்பட்ட பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இதே திட்டங்களில் பணியாற்றியிருக்க வேண்டும். பேச்சுத்திறன் மற்றும் தலைமைத்திறன் கொண்டிருப்பதுடன், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த இருசக்கர வாகன ஓட்டுநா் உரிமம் பெற்றிருப்பவராகவும் இருக்க வேண்டும். வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூடிய குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கான எம்.எஸ்.ஆபீஸ் சான்றிதழுடன் கூடிய பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

    இந்தப் பணிக்கு 28 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும், 2 ஆண்டுகள் இதே போன்ற திட்டங்களில் பணியாற்றியிருப்பவராகவும் இருக்க வேண்டும். பேச்சுத்திறன் மற்றும் தலைமைத்திறன் கொண்டவராகவும், சம்பந்தப்பட்ட வட்டத்தைச் சோ்ந்தவராகவும், இருசக்கர வாகன ஓட்டுநா் உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

    வட்டார இயக்க மேலாளா் பணிக்கு மாதம் ரூ.15 ஆயிரமும், வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிக்கு மாதம் ரூ.12 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும். இந்தப் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு (75 மதிப்பெண்கள்) வரும் நவம்பா் 15 -ந் தேதியும், நோ்முகத் தோ்வு (25 மதிப்பெண்கள்) நவம்பா் 21 -ந் தேதியும் நடைபெறுகிறது. ஆகவே, மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் வரும் நவம்பா் 10 ந் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும்.

    விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: இணை இயக்குநா்/ திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிா் திட்டம், எண்-305, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூா்-641604, தொலைபேசி எண்: 0421-2971149. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

    ×