search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs.84.63 lakh"

    • கதிர்நரசிங்காபுரத்தில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • 389 பயனாளிகளுக்கு ரூ.84.63 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    தேனி:

    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கதிர்நரசிங்காபுரத்தில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் ெதரிவித்த தாவது:-

    விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் வகையில், வேளாண் உபகரணத் தொகுப்புகள் வழங்கும் திட்டம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு வேளாண் சார்ந்த திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு, அவர்களது வாழ்வாதார த்தினை மேம்படுத்தி வருகிறது.

    தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் நலன் காக்கின்ற வகையில், "முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம்" "மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்", "வரும் முன் காப்போம்" திட்டம், "இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டம்" போன்ற பல்வேறு மருத்து வம் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி, அதன் மூலம் பொதுமக்களின் நலன் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    முதல்-அமைச்சர் தமிழ கத்திலுள்ள அனைத்து ஏழை, எளிய மாணவ, மாணவியர்களின் கல்வி த்திறனை மேம்படுத்திடும் வகையில் "இல்லம் தேடிக்கல்வி திட்டம்" ஆரம்பப்பள்ளி பயிலுகின்ற மாணவ-மாணவியர்களின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்திடும் வகையில் "எண்ணும் எழுத்தும்" திட்டம், நாளைய சமுதாயம் வெறும் ஏட்டுக் கல்வியாக மட்டும் அல்லாமல் பல்திறன் வளர்க்கும் கல்வியாக மேம்படுத்திட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு "நான் முதல்வன்" திட்டம் செயல்படுத்தப்பட்டு, வருகிறது.

    அதனைத்தொடர்ந்து, அரசுப்‌ பள்ளிகளில்‌ 6 முதல்‌ 8 ஆம்‌ வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் இயல்பாகவே உள்ள படைப்பாற்றல்‌ ஆர்வ த்தினை வளர்த்தெடுத்து, அறிவியல்‌ மற்றும்‌ கணிதம்‌ தொடர்பாக, புதியவற்றை அறிந்து கொள்ளும்‌ எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கிடும் பொருட்டு, "எங்கும்‌ அறிவியல், யாவும்‌ கணிதம்‌" என்பதனை கருத்தில் கொண்டு, வான வில் மன்றம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும், பெண் கல்வியை ஊக்குவித்திடும் பொருட்டு புதுமைப் பெண் திட்டத்தி னை அரசுப்பள்ளிகளில் பயிலுகின்ற ஏழை மாணவி கள் கல்வியினை ஊக்கப்படு த்திடவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கி டவும், கற்றல் இடை நிற்றலைத் தவிர்த்திடும் பொருட்டு, காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 389 பயனாளிகளுக்கு ரூ.84.63 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    ×