என் மலர்
நீங்கள் தேடியது "Rs 9000 fined"
- வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது 3 பேர் வன விலங்குகளை வேட்டையாடி வந்தது தெரிய வந்தது.
- அவர்களிடம் இருந்து குருவி, கவுதாரி, முயல் ஆகிய விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டியில் வனத்துறையினர் வனவர் ஜெயசீலன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர். அப்போது 3 பேர் வன விலங்குகளை வேட்டையாடி வந்தது தெரிய வந்தது. பெத்தநாயக்கன்பட்டி சமத்துவபுரத்தைச் சேர்ந்த சுந்தர் மகன் சரண்ராஜ் (33), கலைவாணன் மகன் சூர்யா (23), பிரபு (39) என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து குருவி, கவுதாரி, முயல் ஆகிய விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்கள் 3 பேர் மீதும் தலா ரூ.3000 வீதம் ரூ.9000 அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்டியவுடன் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இது குறித்து வனச்சரகர் தெரிவிக்கையில், தடை செய்யப்பட்ட பறவை மற்றும் உயிரினங்களை வேட்டையாடுவது சட்ட ப்படி குற்றமாகும். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேட்டையாடும்பறவை, வன விலங்குகளை வாங்கும் பொதுமக்கள் மீதும் நடவடிக்கை பாயும் என தெரிவித்தார்.






