search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ROOF FALLING"

    • ஜெயங்கொண்டம் அருகே அரசு ஊராட்சி தொடக்கப்பள்ளியில் சிதிலமடைந்த மேற்கூரை பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து மாணவர்கள் மீது விழுவதாக புகார் எழுந்துள்ளது
    • ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரையும் ஒரே வகுப்பாறையில் அமர வைத்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கல்வி பயிற்றுவித்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிலால் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது.

    கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் 56 மாணவிகளும், 35 மாணவர்களும் என மொத்தம் 91 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் நான்கு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களாகவே பள்ளியின் வகுப்பறையில் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் அடிக்கடி கீழே பெயர்ந்து விழுந்து வருகிறது.

    மேலும் பள்ளியைச் சுற்றி குளம் போல் மழை நீர் தேங்கியுள்ளதோடு, அதில் கொசுக்கள் உற்பத்தியாக பல்வேறு தொற்று நோய்களுக்கும் வழிவகுக்கிறது.

    இது குறித்து பள்ளி நிர்வாகம் சட்டமன்ற உறுப்பினர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்தும், நேரில் சென்று தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில்உள்ளதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.

    மேலும் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக பள்ளியின் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் மீண்டும் உதிர்ந்து விழுந்துள்ளது. மேலும் அனைத்து வகுப்பறைகளிலும் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது.

    அதனால் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்பறையில் தண்ணீர் தேங்கி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    வகுப்பறையில் தேங்கியிருந்த தண்ணீரை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் சேர்ந்து அப்புறப்படுத்தினர். இந்நிலையில் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரையும் ஒரே வகுப்பாறையில் அமர வைத்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கல்வி பயிற்றுவித்தனர்.

    மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் போர்க்கால அடிப்படையில் பள்ளியின் மேற்கூரை பூச்சுகள் கீழே விழாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் மீது சிமெண்டு பூச்சு உடைந்து விழும் நிலையும் உள்ளதால் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் பள்ளியில் கட்டிடம் பெரும் அளவில் சேதம் அடைந்து உள்ளதால் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    ×