search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "robbery youth arrest"

    ஆம்பூரில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த உமராபாத் கடாம்பூரை சேர்ந்தவர் அமீர் பாஷா (வயது 57). ஷூ கம்பெனி தொழிலாளி. இவர் நேற்று மாலை கெங்காபுரம் பகுதியில் உள்ள நண்பரின் பீடா கடைக்கு சென்றார்.

    அப்போது, அங்கு வந்த ஒரு வாலிபர் அமீர்பாஷாவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன், 1000 ரூபாயை பறித்தார்.

    மேலும் 2 பேரிடம் மிரட்டி பணம் வழிப்பறி செய்தார். இதுகுறித்து, ஆம்பூர் டவுன் போலீசுக்கு புகார் சென்றது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர்.

    வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர், ஆம்பூர் பி.கஸ்பா குமரேசன் தெருவை சேர்ந்த ஆனந்தன் மகன் பிரபுகுமார் (28) என் பது தெரியவந்தது.

    பிரபுகுமாரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×