என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Robbery at Tasmac shop"

    • ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை அள்ளி சென்றனர்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த அப்துல்லாபுரத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

    நேற்று இரவு 10 மணிக்கு வியாபாரம் முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு இருப்பதைக் கண்டு சூப்பர்வைசர் சதாசிவத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சதாசிவம் இது குறித்து தூசி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது மர்ம கும்பல் டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்து ரூ.30,000 மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடி சென்றது தெரியவந்தது.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×