search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "roadblocking"

    • பெண்கள் பதிவெட்டில் கையெழுத்திடும் போது அவர்களுக்கு தெரியாமல் செல் போனில் போட்டோ எடுத்துள்ளார்.
    • வசந்த குமார் தனது செல்போனை நண்பர் தினேசிடம் அடமானம் வைத்து பணம் பெற்று ள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்துள்ள வீரசோழபுரம் ஊராட்சியில் தற்காலிக பணிதள பொறுப்பாளராக பணிபுரிந்தவர் வசந்தகுமார் (வயது27).இவர் ஊரக வேைல திட்ட பணிக்கு வரும் பயனாளிகள் குறித்த பதிவேடுகளை பராமரிக்கும் வேலையை செய்த வந்தார். வேலை செய்த பெண்கள் பதிவெட்டில் கையெழுத்திடும் போது அவர்களுக்கு தெரியாமல் செல் போனில் போட்டோ எடுத்துள்ளார்.அவர்களின் முகத்தை ஆபாச படத்துடன் இணை த்து மார்பிங் செய்து ரசித்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் வசந்த குமார் தனது செல்போனை நண்பர் தினேசிடம் அடமா னம் வைத்து பணம் பெற்று ள்ளார்.

    அப்போது செல்போ னில் வைத்திருந்த ஆபாசப டங்களை அழித்து விட்டு கொடுத்துள்ளார். ஆனால் தினேஷ் அழிக்கப்பட்ட படங்களை மீட்டெடுத்து பார்த்து அதிர்ச்சி அடை ந்தார். ஆபாச படங்களை வார்டு உறுப்பினரான தங்கராஜ் மகன் ரவியிடம், தினேஷ் காண்பித்துள்ளார் . அப் படங்களை ரவி ேவறு சிலருக்கு பகிர்ந்துள்ளார். அந்த படங்களை பெண்களின் உறவினர் சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வசந்த குமாரை கைது செய்யக் கோரி சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு 100 நாள் வேலையில் பணியாற்றும் பெண்கள், பெண்களை ஆபாசமாக போட்டோ மற்றும் வீடியோ மார்பிங் செய்த நபரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து வசந்த குமாரை போலீ சார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை வீரசோ ழபுரம் பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடு க்க வேண்டும் என கலெ க்டர் ஷ்ரவன் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிலையில் தினேஷ் மற்றும் ரவியை போலீசார் நேற்று கைது செய்தனர். கிராம மக்கள் மறியல் குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் சட்ட விரோதமாக ஒன்றுகூடி, சாலையை மறித்து, அரசு அனுமதியின்றி அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடப்பட்டதாக அதே பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், கோவி ந்தராஜ், ஆனஸ்ட்ராஜ், சதீஷ், ராஜா, மணிகண்டன் உள்ளிட்ட 20 பேர் மீது புகார் மனு அளித்துள்ளார். இது குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×