search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RO Water"

    • செபத்தையாபுரம் அம்மன் கோவில் அருகில் ஆர்.ஓ. சிஸ்டம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைக்கும் பணி தொடக்க விழா பூஜை நடந்தது.
    • பேரூராட்சி தலைவர் பாக்கிய லட்சுமி அறவாழி தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார்

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சி 4-வது வார்டு செபத்தையாபுரம் அம்மன் கோவில் அருகில் பேரூராட்சி 15-வது நிதிக்குழு மானியத்தில் ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் ஆர்.ஓ. சிஸ்டம் அமைத்து பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிடுவதற்கான பணி தொடக்க விழா பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பாக்கிய லட்சுமி அறவாழி தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார்.

    சாயர்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் பாபு, செபத்தையாபுரம் இந்து நாடார் உறவின் முறை தர்மகர்த்தா பால்ராஜ், ஊர் தலைவர் அமிர்தராஜ், சாயர்புரம் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் அறவாழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, பிரவீணா, சுமதி, அமுதா, பிளாட்டினாமேரி, செபத்தையாபுரம் தொழிலதிபர் ஆர்.ஜி.சுதர்சன்ராஜா, பள்ளி கல்வி குழு துணைத் தலைவர் முரளிதரன், ஊர் பிரமுகர்கள் மாதவன், ரத்தினகுமார் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் நித்தியகல்யாண் உட்பட ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    ×