search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "riotous meeting"

    • கடலூரில் கலக கூட்டத்தினரை கட்டுப்படுத்துவது சம்மந்தமான போலீசார் ஒத்திகை நடைபெற்றது.
    • ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது .

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் , கலக கூட்டத்தினரை கட்டுப்படுத்துவது சம்மந்தமான ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் ஒத்திகை பயிற்சியினை பார்வையிட்டு அறிவுரை வழங்கினார் . மாவட்டத்தில் திடீரென கலக கூட்டத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சமயத்தில் , கலக கூட்டத்தினரை காவல்துறையினர் எவ்வாறு கையாள்வது குறித்து ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்திரராஜன் முன்னிலையில் , ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருட்செல்வன் தலைமையில் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது .

    கலக கூட்டத்தினரால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கருதும் சூழ்நிலையில் முதலில் கலக கூட்டத்தினர்க்கு கூடியிருப்பது சட்டவிரோதமான கூட்டம் உடனே கலைந்து செல்ல எச்சரிக்கப்பட்டது . கூட்டம் கலையாத பட்சத்தில் வருண் வாகனம் மூலம் கலக கூட்டத்தினர் மீது தண்ணீர் பீச்சி அடித்தும், பின்னர் வஜ்ரா வாகனம் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசியும், பின்னர் லத்தி சார்ஜ் நடத்தியும் , பின்னர் கலக கூட்டத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியும் ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது . ஒத்திகை பயிற்சி கடலூர் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சேத்தியாத்தோப்பு உட்கோட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது .

    ×