search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Revitalization project"

    • ரூ.2.75 கோடியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட 2-ம் கட்ட பணிகள் நடந்தது.
    • கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி யூனியன் கம்பிக்குடி ஊராட்சி வினோபா நகரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைசார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - II கீழ் ரூ.275.179 லட்சம் மதிப்பில் 63 பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

    கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்ட 2-ம் கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர்.

    இதில் அமைச்சர்கள் பேசுகையில், விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II-ன் மூலம் 2021-2022-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 92 கிராம ஊராட்சிகளிலும், 2022-2023-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 94 கிராம ஊராட்சிகளிலும் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் 100 சதவீதம் விடுதலின்றி நடைபெறுகிறது.

    காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், டி.கடம்பன்குளம் ஊராட்சியில் 12 பணிகள் ரூ.43.95 லட்சம் மதிப்பிலும், கம்பிக்குடி ஊராட்சியில் 10 பணிகள் ரூ.46.725 லட்சம் மதிப்பிலும், கிழவனேரி ஊராட்சியில் 7 பணிகள் ரூ.31.93 லட்சம் மதிப்பிலும்,மாங்குளம் ஊராட்சியில் 7 பணிகள் ரூ.31.96 லட்சம் மதிப்பிலும், முடுக்கன் குளம் ஊராட்சியில் 9 பணிகள் ரூ.45.119 லட்சம் மதிப்பிலும்,சூரனூர் ஊராட்சியில் 10 பணிகள் ரூ.41.445 லட்சம் மதிப்பிலும், வலுக்கலொட்டி ஊராட்சியில் 8 பணிகள் ரூ.34.05 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.275.179 லட்சம் மதிப்பில் கண்மாய், ஊரணி ஆழப்படுத்துதல், பேவர் பிளாக் சாலை அமைத்தல், கதிரடிக்கும் தளம் அமைத்தல், கழிப்பறை, பூங்கா, நர்சரி உள்ளிட்ட 63 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திலகவதி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ராஜம், செயற்பொறியாளர் சக்திமுருகன், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகுமார், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முத்துமாரி, பேரூராட்சி தலைவர் செந்தில், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜேந்திரன்,மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தங்கதமிழ்வாணன், பிரமுகர் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், மாரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×