என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rescue a dead body"

    • வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
    • 17 நாட்களுக்குப் பிறகு மாயமான வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஏ.வெள்ளோடு மேற்கு தெருவைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் மகன் டென்சிங்குமார் (வயது 34). கேட்டரிங் முடித்துவிட்டு கேரள மாநிலம் குமுளியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைபார்த்து வந்தார். இவருக்கு பிரிஸ்கா தமிழரசி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த 26ம் தேதி டென்சிங்குமாரின் தாய்மாமன் இறந்துவிடவே அதற்காக குடும்பத்துடன் வெள்ளோடு வந்தார். மறுநாள் காலை வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவரது மனைவி கடந்த 4ம் தேதி தனது கணவரை கண்டு பிடித்து தரும்படி அம்பாத்துரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வந்தனர். அவரது புகைப்படத்துடன் கூடிய நோட்டீஸ் ஒட்டியும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நேற்று அதேபகுதியில் உள்ள பக்கவாட்டு சுவர் இல்லாத ஒரு கிணற்றில் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினர் வரவழை க்கப்பட்டு கிணற்றில் கிடந்தவரின் உடல் போராடி மீட்கப்பட்டது. போலீசார் விசாரணையில் இறந்து கிடந்தவர் டென்சிங்குமார் என உறுதியானது.

    ஆனால் அவரது உடல் அழுகிய நிலையில் இருந்த தால் பிரேத பரிசோதனை செய்தால்தான் அவர் எவ்வாறு இறந்தார் என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். ஆனால் சம்பவ இடத்திற்கு வந்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் மறுத்துவிட்டனர். இதனை ெதாடர்ந்து ஓலைப்பாய் மூலம் அழுகிய நிலையில் இருந்த டென்சிங்குமார் உடல் சுற்றப்பட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது

    17 நாட்களுக்குப் பிறகு மாயமான வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தவறி விழுந்தாரா அல்லது யாரேனும் கிணற்றில் தள்ளி கொலை செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கிராம புறங்களில் பாதுகாப்பற்ற முறையில் பராமரிப்பின்றி உள்ள கிணறுகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆய்வு செய்து அதனை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×